ETV Bharat / state

ஏரிக்கரைகளில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு - ஆட்சியர் தகவல்

author img

By

Published : Jun 5, 2019, 9:17 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிக்கரைகளில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் மரம்நடும் நிகழ்ச்சி

உலகச் சுற்றுச்சுழல் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அலுவலகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"தமிழ்நாடு அரசால் மரக்கன்றுகள் வளர்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 15 தொழிற்சாலைகளில் 1500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இம்மாதம் இறுதிக்குள் மூன்றாயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊரக வளர்ச்சி துறை மூலமாக நான்கு லட்சம் மரக்கன்றுகளும், பொதுப்பணித் துறை சார்பாக ஏரிக்கரைகளில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் மரம்நடும் நிகழ்ச்சி

உலகச் சுற்றுச்சுழல் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அலுவலகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"தமிழ்நாடு அரசால் மரக்கன்றுகள் வளர்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 15 தொழிற்சாலைகளில் 1500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இம்மாதம் இறுதிக்குள் மூன்றாயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊரக வளர்ச்சி துறை மூலமாக நான்கு லட்சம் மரக்கன்றுகளும், பொதுப்பணித் துறை சார்பாக ஏரிக்கரைகளில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் மரம்நடும் நிகழ்ச்சி
Intro:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 4 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.


Body:திருவள்ளூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக அரசால் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடுவதற்கு 15 தொழிற்சாலைகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இம்மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும், மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊரக வளர்ச்சி துறை மூலமாக 4 லட்சம் மரக்கன்றுகள் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுப்பணித் துறை மூலமாக ஏரிக்கரைகளிலும் 1 லட்சம் பனை மரங்கள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.