ETV Bharat / state

ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாகும் ஏரி நீர் - பொதுமக்கள் காட்டம்!

author img

By

Published : Sep 15, 2019, 7:15 PM IST

திருவள்ளூர் : திருத்தணி ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாகும் ஏரி நீரால் நகராட்சியில் மீண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏரி தண்ணீர் வீணாக நந்தி ஆற்றில் கலக்கிறது

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ஜோதி நகர் பகுதியில் சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியை திருத்தணி ஒன்றியம் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது.

ஏரி தண்ணீர் வீணாகும் அவல நிலை

இந்நிலையில், ஏரியை ஒன்றிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் ஏரியின் மதகு சேதமடைந்து, அதிலிருந்து நீர் வீணாக வெளியேறி கால்வாய் வழியாக நந்தி ஆற்றில் கலக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏரிக்கு வந்த நீர், ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாக போவதால் நகராட்சியில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீரமைத்து நீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ஜோதி நகர் பகுதியில் சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியை திருத்தணி ஒன்றியம் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது.

ஏரி தண்ணீர் வீணாகும் அவல நிலை

இந்நிலையில், ஏரியை ஒன்றிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் ஏரியின் மதகு சேதமடைந்து, அதிலிருந்து நீர் வீணாக வெளியேறி கால்வாய் வழியாக நந்தி ஆற்றில் கலக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏரிக்கு வந்த நீர், ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாக போவதால் நகராட்சியில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீரமைத்து நீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:திருத்தணி ஏரியின் மதகு சேதமடைந்ததால் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பிய அந்தத் தண்ணீர் வீணாகி வெளியேறி நந்தி ஆற்றில் கலக்கிறது.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி ஜோதி நகர் பகுதியில் சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியை திருத்தணி ஒன்றியம் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு இரு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரியில் பாதி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இந்தநிலையில் ஏரியை ஒன்றிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் ஏரியின் மதகு சேதமடைந்து அதிலிருந்து ஏரி தண்ணீர் வீணாக வெளியேறி கால்வாய் வழியாக நந்தி ஆற்றில் கலக்கிறது. ஒன்றிய நிர்வாகம் அலட்சியத்தால் வீணாக போகும் ஏறி தண்ணீரால் நகராட்சியில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏரிக்கு வந்த தண்ணீர் வீணாக செல்வதால் நகர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் ஒரு நொடி நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீரமைத்து தண்ணீர் வராமல் தடுக்க வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.