ETV Bharat / state

ஆரணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

author img

By

Published : Sep 16, 2020, 8:37 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆரணியாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unidentified-male-body-recovered-in-arani-river
unidentified-male-body-recovered-in-arani-river

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தின் ஆரணியாற்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலதுறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் அடையாள ஆட்டை உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாததால், உயிரிழந்த நபரின் விவரங்கள் குறித்து தெரியவில்லை.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை : உறவினர்கள் சாலைமறியல்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தின் ஆரணியாற்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலதுறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் அடையாள ஆட்டை உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாததால், உயிரிழந்த நபரின் விவரங்கள் குறித்து தெரியவில்லை.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை : உறவினர்கள் சாலைமறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.