ETV Bharat / state

ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது!

author img

By

Published : Apr 15, 2020, 5:19 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகே ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கள்ளச்சாராயத்தை கைப்பற்றிய மதுவிலக்கு காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

two-arrested-for-smuggling-liquor
two-arrested-for-smuggling-liquor

கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் மட்டும் அதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து அதிகளவிலான கள்ளச்சாராயம் தமிழ்நாட்டிற்கு கடத்தி வருதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட காவல்துறையினர், இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திவரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த வாகனத்தில் வந்த இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 35 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு!

கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் மட்டும் அதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து அதிகளவிலான கள்ளச்சாராயம் தமிழ்நாட்டிற்கு கடத்தி வருதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட காவல்துறையினர், இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திவரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த வாகனத்தில் வந்த இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 35 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.