ETV Bharat / state

மூன்றரை வயது மகனைக் கொன்ற தாய் - பரபரப்பு வாக்குமூலம்!

திருவள்ளூர்: மணஉறவைத் தாண்டிய காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொலை செய்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : May 22, 2019, 11:35 AM IST

Updated : May 22, 2019, 7:13 PM IST

புவனேஸ்வரி

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (26), பைனான்ஸ் தொழிலதிபரான இவருக்கும், அவரது உறவுக்கார பெண்ணான புவனேஸ்வரிக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்றரை வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்து புவனேஸ்வரி மகனுடன் அம்பத்தூர் அடுத்த மேனாம்பட்டு பகுதியில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூரில் இருக்கும் தனது தாயாருக்கு போன் செய்து மகன் கிஷோருக்கு காயமடைந்து விட்டதாகவும், சிகிச்சைக்காக திருவாரூருக்கு அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

4 Years old child murdered
கள்ளக்காதலனுடன் புவனேஸ்வரி

இதில் சந்தேகமடைந்த புவனேஸ்வரியின் தாயார் மீண்டும் தொடர்பு கொண்டபோது டவுன் பகுதியின் வெளிப்பகுதியில் மகனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது பேரன் இறந்திருப்பதும், சிறுவனை எரிக்கும் முயற்சியில் புவனேஸ்வரி ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே திருவாரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்தபோது அவன் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்தது சென்னை அம்பத்தூர் பகுதி என்பதால், அந்தப் பகுதி காவல் துறையினருக்கு வழக்கை மாற்றினர். இதையடுத்து அம்பத்தூர் காவல் துறையினர் புவனேஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

4 Years old child murdered
கொலைச்செய்யப்பட்ட சிறுவன்

குற்றம்சாட்டப்பட்டுள்ள புவனேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, திருவாரூரைச் சேர்ந்த என்னை, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தாய்மாமனான சோமசுந்தரம் என்பவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்து-விட்டனர். எங்களுக்கு திருமணமாகி கிஷோர் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தினமும் எனது கணவர் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் எங்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து மனஅமைதிக்காக கடந்த ஆண்டு போரூரில் மூன்று நாட்கள் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு மாநாட்டிற்கு வந்தேன். அப்போதுதான் திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்த அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் மண உறவைத் தாண்டிய காதலாக மாறியது.

இதையடுத்து கணவன், உறவினர்களை உதறி தள்ளிவிட்டு மகனை அழைத்துக் கொண்டு என்னுடைய மணஉறவைத் தாண்டிய காதலனான கார்த்திகேயனுடன் சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தேன். இங்கு அம்பத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திகேயனுடன் வசித்துவந்தேன். இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரைப் பார்த்து கிஷோர் பதற்றமடைந்து அலறி அடித்து அழுவான். இதனால் கிஷோரை அடித்து, உதைத்து வந்தேன். மேலும் மகன் அடிக்கடி இதுபோல் செய்து கொண்டிருந்ததால் எங்களின் மணஉறவைத் தாணடிய காதலுக்கு மிகவும் இடையூறாக இருந்தது.

4 Years old child murdered
புவனேஸ்வரி

மே 19ஆம் தேதியன்று கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தபோது, மீண்டும் எனது மகன் அழுததால், ஆத்திரமடைந்து தோசை கரண்டியால் ஓங்கி அடித்தேன். இதில் அவனது தொடையில் எழும்பு முறிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு மகனின் நிலைமை மோசமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்து விட்டான்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காவல் துறையினரிடம் சிக்கி விடுவேன் என பயந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூருக்கு கொண்டு சென்று எரித்து விடலாம் என மணஉறவைத் தாண்டிய காதலன் கொடுத்த யோசனையின் பேரில் திருவாரூர் கொண்டு சென்றேன். ஆனால் எனது தாயாருக்கு தகவல் கொடுத்ததால், காவல் துறையினரிடம் சிக்கி கொண்டோம் என்றார். மணஉறவைத் தாண்டிய காதலுக்கு பெற்ற மகனையே தாய் கொன்ற சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (26), பைனான்ஸ் தொழிலதிபரான இவருக்கும், அவரது உறவுக்கார பெண்ணான புவனேஸ்வரிக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்றரை வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்து புவனேஸ்வரி மகனுடன் அம்பத்தூர் அடுத்த மேனாம்பட்டு பகுதியில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூரில் இருக்கும் தனது தாயாருக்கு போன் செய்து மகன் கிஷோருக்கு காயமடைந்து விட்டதாகவும், சிகிச்சைக்காக திருவாரூருக்கு அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

4 Years old child murdered
கள்ளக்காதலனுடன் புவனேஸ்வரி

இதில் சந்தேகமடைந்த புவனேஸ்வரியின் தாயார் மீண்டும் தொடர்பு கொண்டபோது டவுன் பகுதியின் வெளிப்பகுதியில் மகனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது பேரன் இறந்திருப்பதும், சிறுவனை எரிக்கும் முயற்சியில் புவனேஸ்வரி ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே திருவாரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்தபோது அவன் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்தது சென்னை அம்பத்தூர் பகுதி என்பதால், அந்தப் பகுதி காவல் துறையினருக்கு வழக்கை மாற்றினர். இதையடுத்து அம்பத்தூர் காவல் துறையினர் புவனேஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

4 Years old child murdered
கொலைச்செய்யப்பட்ட சிறுவன்

குற்றம்சாட்டப்பட்டுள்ள புவனேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, திருவாரூரைச் சேர்ந்த என்னை, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தாய்மாமனான சோமசுந்தரம் என்பவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்து-விட்டனர். எங்களுக்கு திருமணமாகி கிஷோர் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தினமும் எனது கணவர் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் எங்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து மனஅமைதிக்காக கடந்த ஆண்டு போரூரில் மூன்று நாட்கள் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு மாநாட்டிற்கு வந்தேன். அப்போதுதான் திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்த அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் மண உறவைத் தாண்டிய காதலாக மாறியது.

இதையடுத்து கணவன், உறவினர்களை உதறி தள்ளிவிட்டு மகனை அழைத்துக் கொண்டு என்னுடைய மணஉறவைத் தாண்டிய காதலனான கார்த்திகேயனுடன் சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தேன். இங்கு அம்பத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திகேயனுடன் வசித்துவந்தேன். இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரைப் பார்த்து கிஷோர் பதற்றமடைந்து அலறி அடித்து அழுவான். இதனால் கிஷோரை அடித்து, உதைத்து வந்தேன். மேலும் மகன் அடிக்கடி இதுபோல் செய்து கொண்டிருந்ததால் எங்களின் மணஉறவைத் தாணடிய காதலுக்கு மிகவும் இடையூறாக இருந்தது.

4 Years old child murdered
புவனேஸ்வரி

மே 19ஆம் தேதியன்று கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தபோது, மீண்டும் எனது மகன் அழுததால், ஆத்திரமடைந்து தோசை கரண்டியால் ஓங்கி அடித்தேன். இதில் அவனது தொடையில் எழும்பு முறிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு மகனின் நிலைமை மோசமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்து விட்டான்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காவல் துறையினரிடம் சிக்கி விடுவேன் என பயந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூருக்கு கொண்டு சென்று எரித்து விடலாம் என மணஉறவைத் தாண்டிய காதலன் கொடுத்த யோசனையின் பேரில் திருவாரூர் கொண்டு சென்றேன். ஆனால் எனது தாயாருக்கு தகவல் கொடுத்ததால், காவல் துறையினரிடம் சிக்கி கொண்டோம் என்றார். மணஉறவைத் தாண்டிய காதலுக்கு பெற்ற மகனையே தாய் கொன்ற சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21.05.19
திருவள்ளூர்
ஆவடி_ஆ.கார்த்திக்

அம்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 1/2 வயது மகனை அடித்து கொன்ற தாய், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். பாட்டியின் சாதுர்யத்தால் கொலையாளிகள் சிக்கி கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சோமசுந்தரம்(26), பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி(21), இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கிஷோர் என்ற 

3 1/2 வயதில் ஒரு மகன் இருந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த சில மாதங்களாக அம்பத்தூர், மேனாம்பேடு, வ.ஊ.சி. நகரில் கார்த்திகேயன்(28), என்பவருடன் தனது மகனுடன் வசித்து வந்தார். கார்த்திகேயன் பெயிண்டிங் காண்ட்ராக்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று கிஷோருக்கு காயமடைந்த விட்டதாகவும் திருவாரூருக்கு மகனை அழைத்து வருவதாக புவனேஸ்வரி அவரது அம்மா புஷ்பாவிடம் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன புஷ்பா பேரனை ஏற்கனவே அடித்து கொண்டு இருப்பீர்கள் கொன்று விட்டீர்களா என பயந்தபடி

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பேரன் கிசோர் இறந்த  நிலையில் இருந்ததும் அந்த சிறுவனின் உடலை எரிப்பதற்கான ஆயத்த பணிகள் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன புஷ்பா இதுகுறித்து திருவாரூர் போலீசாருக்கு  அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் போலீசார் விசாரித்தபோது சிறுவன் கிஷோர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த பகுதி அம்பத்தூர் என்பதால் இறந்து கிடந்த சிறுவன் கிஷோர் மற்றும் தாய் புவனேஸ்வரி, கள்ளக்காதலன் கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் அம்பத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அம்பத்தூர் உதவி கமிஷ்னர் கண்ணன் இறந்து கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தார்.


   விசாரணையில் படியில் இருந்து  தவறி விழுந்ததால் மகன் கிசோர் இறந்து விட்டதாக போலீசில் தெரிவித்தார். மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து இருவரிடமும் தீவிரமாக விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகனை அடித்துக் கொன்றதாக தெரிவித்தனர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது இதுகுறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது :


ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த சோமசுந்தரம் எனது தாய்மாமன் என்பதால் சிறு வயதிலேயே என்னை திருமணம் செய்து வைத்து விட்டனர். எங்களுக்கு  திருமணமாகி கிஷோர் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் சோமசுந்தரம் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் எங்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மன அமைதிக்காக கடந்த ஆண்டு போரூரில் மூன்று நாட்கள் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு மாநாட்டிற்கு  வந்தேன். அப்போதுதான் திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்த அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த எனக்கு கார்த்திகேயன் ஒரு கனவானகவும், ஆறுதலாகவும் இருந்து வந்தார். இதனால் கணவன் மற்றும் உறவினர்களை உதறி தள்ளிவிட்டு என்னுடைய கள்ளக்காதலனான கார்த்திகேயனுடன் எனது மகன் கிஷோரை அழைத்துக் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தேன். இங்கு அம்பத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திகேயனுடன் வசித்து வந்தேன். கணவன், மனைவி போல் இருந்த எங்களுக்கு எனது மகன் மூலம் வில்லன் உருவானான்.  இந்த நிலையில் கார்த்திகேயன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரைப் பார்த்து கிஷோர் பதட்டமடைந்து அலறி அடித்து அழுவான். இதனால் கிஷோரை அடித்து, உதைத்து வந்தேன். மேலும் மகன் அடிக்கடி இதுபோல் செய்து கொண்டிருந்ததால் எங்களின் கள்ளக்காதலுக்கு மிகவும் இடையூறாக மகன் இருந்தான். இந்த நிலையில் 19-ம் தேதி அன்று மீண்டும் கார்த்திகேயனை பார்த்து கிஷோர் அழுதான். இதனால் ஆத்திரமடைந்த நான் தோசை கரண்டியால் எடுத்து எனது மகனை ஓங்கி அடித்தேன். இதில் கிஷோருக்கு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதைக் கண்டதும் பதறிப்போய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கிஷோரின் நிலைமை சீரியசாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறி உள்ளனர்.  இதையடுத்து தனியார் வாகனத்தின் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிஷோரை கொண்டு சென்றதாகவும் ஆனால் செல்லும் வழியிலேயே கிஷோர் இறந்துவிட்டதால் மருத்துவமனைக்குள் சென்றால் டாக்டர்கள் போலீசாரிடம் சொல்லி நம்மை சிக்க வைத்து விடுவார்கள் என்று பயந்து தனியார் சிறிய ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த கார்த்திகேயன், கிஷோரின் உடலை திருவாரூர் எடுத்து சென்று யாருக்கும் தெரியாமல் எரித்து விடலாம் என யோசனை அளித்ததையடுத்து கீழ்ப்பாக்கத்தில் இருந்து கிஷோரின் உடலை திருவாரூருக்கு எடுத்துச் சென்றோம். இதற்கிடையில் எனது அம்மா புஷ்பா செல்போனில் அழைத்த போது தான் கிஷோருக்கு காயம் ஏற்பட்டு விட்டது திருவாரூர் அழைத்து வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தேன். எனது அம்மா திருவாரூர் வந்து பார்த்தபோது தான் பேரன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிந்து திருவாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசிடம் மாட்டி கொண்டோம் என வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிறுவன் இறந்து இரண்டு நாட்கள் ஆகி உடல் சற்று அழுகிய நிலையில் இருந்தது புஷ்பா திருவாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் சிறுவனின் உடலை அங்கேயே உள்ள அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை செய்திருக்கலாம் ஆனால் அந்த அழுகிய உடலை அம்பத்தூருக்கு திருவாரூர் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் எஸ்.பி.யிடம் புகார் அளிக்க போவதாகவும், மகனை கொலை செய்த வழக்கில் பாட்டி சாதுர்யமாக செயல்பட்டதால் கொலையாளிகள் எளிதில் சிக்கி கொண்டதாக அம்பத்தூர் போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை அடித்து கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Last Updated : May 22, 2019, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.