ETV Bharat / state

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று தந்தையின் கனவை நினைவேற்றிய மாணவி!

author img

By

Published : Jul 25, 2023, 7:33 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா, காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று தந்தையின் கனவை நிறைவேற்றி உள்ளார்.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று தந்தையின் கனவை நினைவாக்கிய மாணவி
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று தந்தையின் கனவை நினைவாக்கிய மாணவி
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று தந்தையின் கனவை நினைவாக்கிய மாணவி

திருவள்ளூர்: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் பளு தூக்கி தங்க பதக்கம் வென்று தந்தையின் கனவை நிறைவேற்றிய மாணவி ஆர்.பி கீர்த்தனாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஆர்.பி கீர்த்தனா. மாணவி கீர்த்தனாவின் தந்தை புருஷோத்தமன் சிறுவயது முதல் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள மிக ஆர்வத்தோடு பயிற்சி மேற்கொண்டு வந்து உள்ளார்.

ஆனால் பளு தூக்கும் போது எடை கூட்டி தூக்கும் போது அவரது தோள்பட்டை விரிந்து பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது அவருக்கு கனவாகி போன நிலையில் வீட்டில் இருக்கும் போது, இது குறித்து மனவேதனையுடன் அடிக்கடி புலம்பி வந்து உள்ளார். இதைக் கேட்ட கீர்த்தனா தனது 12 வயது முதல் பளு தூக்கும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 81 கிலோ பிரிவில் கலந்து கொண்டார். போட்டியில் 177 கிலோ பளுவினை தூக்கி தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார். அவருக்கு அவர் படிக்கும் தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவி கீர்த்தனா பேண்ட் வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டார்.

பள்ளியின் முதல்வர் சதிஷ் மற்றும் ஆசிரியர்கள் மலர் கொத்து கொடுத்தும், மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதை அடுத்து அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கீர்த்தனாவோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து பாராட்டு விழாவில் பேசிய மாணவி கீர்த்தனா, தனது தந்தை பளூ தூக்கும் பயிற்சி எடுத்து வந்தாகவும் அது நிறைவேறாமல் போனதால் அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் 12 வயது முதல் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், தற்போது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று உள்ளதாகவும் கூறிக் கொண்டிருக்கும் போதே அவரது கண்களில் நீர் வழிந்தது. அதே போல் தந்தை பேசிக் கொண்டிருக்கும் போது மாணவியின் கண்கள் கண்ணீர் கசிந்தது. இந்த நிகழ்வு பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அவர், இது தனக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாகவும், இதனால் தனது தந்தை மிகவும் சந்தோஷம் அடைந்து உள்ளதாகவும், 2026 இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் அதற்கு அரசு அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 27ஆம் தேதி கலந்தாய்வு!

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று தந்தையின் கனவை நினைவாக்கிய மாணவி

திருவள்ளூர்: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் பளு தூக்கி தங்க பதக்கம் வென்று தந்தையின் கனவை நிறைவேற்றிய மாணவி ஆர்.பி கீர்த்தனாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஆர்.பி கீர்த்தனா. மாணவி கீர்த்தனாவின் தந்தை புருஷோத்தமன் சிறுவயது முதல் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள மிக ஆர்வத்தோடு பயிற்சி மேற்கொண்டு வந்து உள்ளார்.

ஆனால் பளு தூக்கும் போது எடை கூட்டி தூக்கும் போது அவரது தோள்பட்டை விரிந்து பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது அவருக்கு கனவாகி போன நிலையில் வீட்டில் இருக்கும் போது, இது குறித்து மனவேதனையுடன் அடிக்கடி புலம்பி வந்து உள்ளார். இதைக் கேட்ட கீர்த்தனா தனது 12 வயது முதல் பளு தூக்கும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 81 கிலோ பிரிவில் கலந்து கொண்டார். போட்டியில் 177 கிலோ பளுவினை தூக்கி தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார். அவருக்கு அவர் படிக்கும் தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவி கீர்த்தனா பேண்ட் வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டார்.

பள்ளியின் முதல்வர் சதிஷ் மற்றும் ஆசிரியர்கள் மலர் கொத்து கொடுத்தும், மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதை அடுத்து அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கீர்த்தனாவோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து பாராட்டு விழாவில் பேசிய மாணவி கீர்த்தனா, தனது தந்தை பளூ தூக்கும் பயிற்சி எடுத்து வந்தாகவும் அது நிறைவேறாமல் போனதால் அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் 12 வயது முதல் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், தற்போது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று உள்ளதாகவும் கூறிக் கொண்டிருக்கும் போதே அவரது கண்களில் நீர் வழிந்தது. அதே போல் தந்தை பேசிக் கொண்டிருக்கும் போது மாணவியின் கண்கள் கண்ணீர் கசிந்தது. இந்த நிகழ்வு பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அவர், இது தனக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாகவும், இதனால் தனது தந்தை மிகவும் சந்தோஷம் அடைந்து உள்ளதாகவும், 2026 இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் அதற்கு அரசு அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 27ஆம் தேதி கலந்தாய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.