திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, மாதவரம், திருவொற்றியூர் என 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 41 ஆயிரத்து 349 பேரும், 16 லட்சத்து 66 ஆயிரத்து 187 பெண் வாக்காளர்களும், இதர பிரிவில் 716 பேர் என மொத்தம் 33 லட்சத்து 8 ஆயிரத்து 252 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 3,604 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெயர் விடுபட்டிருந்தால் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்துகொள்ளலாம் எனவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!