ETV Bharat / state

சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

author img

By

Published : Aug 22, 2022, 12:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோயிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓர் ஆண்டாக இத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன.

மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

இதனை தொடர்ந்து 19ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் 17ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று(ஆக.22) காலையில் 6ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தன.

இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து கலசங்களை கொண்டு சென்று ராஜகோபுரம், மூலவர் சன்னதி, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அப்போது கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என எழுப்பிய கோஷம் விண்ணை எட்டியது.

இதனையடுத்து பாலசுப்பிரமணிய சுவாமி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: மருத்துவர் இல்ல திருமண விழாவில் மு.க. ஸ்டாலின்

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோயிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓர் ஆண்டாக இத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன.

மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

இதனை தொடர்ந்து 19ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் 17ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று(ஆக.22) காலையில் 6ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தன.

இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து கலசங்களை கொண்டு சென்று ராஜகோபுரம், மூலவர் சன்னதி, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அப்போது கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என எழுப்பிய கோஷம் விண்ணை எட்டியது.

இதனையடுத்து பாலசுப்பிரமணிய சுவாமி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: மருத்துவர் இல்ல திருமண விழாவில் மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.