ETV Bharat / state

ஒரே கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாவட்ட நீதிபதியாகத் தேர்வு! - saveetha law college students pass the district judge exam

திருவள்ளூர்: சவீதா பல்கலைக்கழகத்தின் சவீதா சட்டக்கல்லூரியில் பயின்ற ஐந்து மாணவர்கள் மாவட்ட நீதிபதியாகத் தேர்வாகி அசத்தியுள்ளனர்.

saveetha law college
author img

By

Published : Nov 6, 2019, 11:45 PM IST

சென்னையிலுள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் கீழ் சவீதா சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சட்டப்படிப்பைப் படித்து வருகின்றனர். இதில் பயின்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவும், தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

இந்தச்சூழலில் இக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த ஐந்து பேர் மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களாக, முத்துராஜ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கதிலும், ஆர்.எஸ். பிரகந்தி விழுப்புரத்திலும், எம். அமுதா ஆற்காட்டிலும் சி.பி. முல்லை வாணன் திண்டுக்கல்லிலும், வீ.சி. தாரணி ஈரோட்டிலும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சவீதா பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரய்யன் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி தங்களது பணியை நடுநிலையாகவும் கடமை உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதேபோல், சட்டக்கல்லூரி முதல்வர் ஆஷா சுந்தரம் இவர்களைப் போல பல நீதிபதிகளை உருவாக்கத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் கல்லூரியில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: 11ஆம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்!

சென்னையிலுள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் கீழ் சவீதா சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சட்டப்படிப்பைப் படித்து வருகின்றனர். இதில் பயின்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவும், தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

இந்தச்சூழலில் இக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த ஐந்து பேர் மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களாக, முத்துராஜ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கதிலும், ஆர்.எஸ். பிரகந்தி விழுப்புரத்திலும், எம். அமுதா ஆற்காட்டிலும் சி.பி. முல்லை வாணன் திண்டுக்கல்லிலும், வீ.சி. தாரணி ஈரோட்டிலும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சவீதா பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரய்யன் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி தங்களது பணியை நடுநிலையாகவும் கடமை உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதேபோல், சட்டக்கல்லூரி முதல்வர் ஆஷா சுந்தரம் இவர்களைப் போல பல நீதிபதிகளை உருவாக்கத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் கல்லூரியில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: 11ஆம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்!

Intro:சென்னை அருகே தனியார் சட்டக்கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் ஒரே நேரத்தில் 5 மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக தேர்வாகி அசத்தியுள்ளனர்.
Body:சென்னையில் உள்ள சவீதா பல்கலைகழகத்தின் கீழ் சவீதா சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சட்டப் படிப்பை படித்து வருகிறார்கள். சட்டப் படிப்பை முடித்தவர்கள் வக்கீலாகவும், பிரபல நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த 5 பேர் மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களில் முத்துராஜ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கதிலும், ஆர் .எஸ்.பிரகந்தி விழுப்புரத்திலும், எம். அமுதா ஆற்காட்டிலும் சி. பி. முல்லைவாணன் திண்டுக்கல்லிலும், வீ .சி. தாரணி ஈரோட்டிலும் நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Conclusion:இவர்களை சவீதா பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் என். எம். வீரய்யன் பாராட்டினார். தங்களது பணியை நடுநிலையாகவும் கடமை உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதேபோல் சட்ட கல்லூரி முதல்வர் ஆஷா சுந்தரம் இது போன்று பல நீதிபதிகளை உருவாக்க தேவையான அனைத்து பயிற்சிகளும் கல்லூரியில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.