ETV Bharat / state

100 நாள்வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கக்கோரி சாலை மறியல்

திருவள்ளூர் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Aug 13, 2019, 7:50 PM IST

BALANCE AMOUNT

திருவள்ளூர் மாவட்டம், அருமந்தை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு குடும்பம் ஒன்றிற்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால் அங்குள்ள அலுவலர்கள் 100நாட்கள் வேலை வழங்காமல் ஏழு நாட்கள் மட்டுமே வேலை வழங்கி நிதியை கையாடல் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்  சாலை மறியல்  திருவள்ளூர்  100 WORK PROJRCT  ROAD BLOKING
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் வேலை வழங்காததால் விரக்தியடைந்த கிராம மக்கள் இன்று அருமந்தை கூட்டுசாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பும் மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், அருமந்தை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு குடும்பம் ஒன்றிற்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால் அங்குள்ள அலுவலர்கள் 100நாட்கள் வேலை வழங்காமல் ஏழு நாட்கள் மட்டுமே வேலை வழங்கி நிதியை கையாடல் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்  சாலை மறியல்  திருவள்ளூர்  100 WORK PROJRCT  ROAD BLOKING
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் வேலை வழங்காததால் விரக்தியடைந்த கிராம மக்கள் இன்று அருமந்தை கூட்டுசாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பும் மக்கள்
Intro:திருவள்ளூர் அருகே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தியும் சம்பள நிலுவை தொகையை வழங்க கோரியும் சாலை மறியல்.


Body:திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அருமந்தை கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டத்திற்கு புறம்பாக ஏழு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் 100 நாள் வேலையை உறுதி செய்ய வேண்டும், சம்பள நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அருமந்தை கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தொடர்ந்து வேலை வழங்குவதாகவும், நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.