ETV Bharat / state

அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

author img

By

Published : Oct 31, 2022, 8:32 PM IST

அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி தண்ணீர் குசா ஆற்றில் வெளியேற்றப்படுவதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, தமிழ்நாடு எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு வட்டம் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலப்பகுதியில் தண்ணீர் செல்லும் என்பதால் ஆற்றைக்கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதனையடுத்து இந்தப்பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், தொடர்ந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: வாகனம் நிறுத்துவதில் முன் விரோதம்... தாயின் கண்முன்னே மகன் கடத்தி கொலை...

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி தண்ணீர் குசா ஆற்றில் வெளியேற்றப்படுவதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, தமிழ்நாடு எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு வட்டம் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலப்பகுதியில் தண்ணீர் செல்லும் என்பதால் ஆற்றைக்கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதனையடுத்து இந்தப்பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், தொடர்ந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: வாகனம் நிறுத்துவதில் முன் விரோதம்... தாயின் கண்முன்னே மகன் கடத்தி கொலை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.