ETV Bharat / state

ஊராட்சி செயலாளர்களின் பணி இடமாற்றத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

author img

By

Published : Nov 20, 2019, 3:09 AM IST

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராம தண்டலம், சித்தம் பாக்கம் ஊராட்சி செயலாளர்களை பணி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஊராட்சி செயலாளர் பணி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம், ராம தண்டலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக டில்லிபாபு, எபினேசர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பணியிட மாற்றம் செய்யப் போவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்த சிற்றம்பாக்கம் மற்றும் ராம தண்டலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளர் பணி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பின்னர் அவர்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம், ராம தண்டலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக டில்லிபாபு, எபினேசர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் பணியிட மாற்றம் செய்யப் போவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்த சிற்றம்பாக்கம் மற்றும் ராம தண்டலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளர் பணி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பின்னர் அவர்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Intro:திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராம தண்டலம் மற்றும் சித்தம் பாக்கம் ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.


Body:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிற்றம்பாக்கம் மற்றும் ராம தண்டலம் ஊராட்சி இந்நிலையில் சிற்றம்பாக்கம் ஊராட்சி செயலாளர் டில்லிபாபு என்பவரும் ராம தண்டலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக எபினேசர் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப் போவதாக தெரிவித்தனர். இதனை அறிந்த சிற்றம்பாக்கம் மற்றும் ராம தண்டலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு ஊராட்சி செயலாளர்களும் பணி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாலை பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சிற்றம்பாக்கம் மற்றும் ராம தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி செயலாளர்கள் இரண்டு பேருமே பொது மக்களுக்கு நல்ல முறையில் பணி செய்து வருகின்றனர் எனவே இரண்டு ஊராட்சி செயலாளர்களும் மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.பின்னர் இவர்கள் அனைவரும் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.