ETV Bharat / state

சிதலமடைந்த மின்மாற்றியை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 13, 2020, 12:19 PM IST

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் சிதலமடைந்த மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Public demonstration demanding removal of blighted transformer
Public demonstration demanding removal of blighted transformer

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தில் உள்ள சிதலமடைந்த மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி மற்றும் ரேஷன் கடைக்கு மத்தியில் மின்மாற்றியின் கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.

இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் வீடுகளின் மேலே மின் கம்பிகள் செல்வதால் மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது.

ஆகவே உடனடியாக மின் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க: விதி மீறி செயல்பட்ட பெட்ரோல் பங்குக்கு சீல்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தில் உள்ள சிதலமடைந்த மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி மற்றும் ரேஷன் கடைக்கு மத்தியில் மின்மாற்றியின் கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.

இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் வீடுகளின் மேலே மின் கம்பிகள் செல்வதால் மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது.

ஆகவே உடனடியாக மின் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க: விதி மீறி செயல்பட்ட பெட்ரோல் பங்குக்கு சீல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.