ETV Bharat / state

பொதுமக்களுக்கு காவல்துறையினர் இலவச முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

திருவள்ளூர்: மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

author img

By

Published : Apr 18, 2021, 7:41 PM IST

police officials and charitable trust together provide free mask to public
பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய காவல்துறையினர்

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக இருந்து வருகிறது. தொற்றின் தாக்கம் கடந்த ஆண்டை காட்டிலும் பலமடங்கு உயர்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் அறங்காவலர் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், அறங்காவலர் சாரிட்டபிள் டிரஸ்ட் கார்த்திகேயன், திருவள்ளூர் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாலையில் நடந்து வருபவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்தும், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

திருவள்ளூர் தேரடி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளொன்றுக்கு 1000 தடுப்பூசிகள் இலக்கு

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக இருந்து வருகிறது. தொற்றின் தாக்கம் கடந்த ஆண்டை காட்டிலும் பலமடங்கு உயர்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் அறங்காவலர் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், அறங்காவலர் சாரிட்டபிள் டிரஸ்ட் கார்த்திகேயன், திருவள்ளூர் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாலையில் நடந்து வருபவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்தும், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

திருவள்ளூர் தேரடி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளொன்றுக்கு 1000 தடுப்பூசிகள் இலக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.