ETV Bharat / state

ரயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரி பாமக ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு தமிழ்நாட்டில் கிடப்பில் போட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

author img

By

Published : Apr 17, 2022, 10:28 AM IST

ரயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரி  திருவள்ளூரில் பாமக ஆர்பாட்டம்!
ரயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரி திருவள்ளூரில் பாமக ஆர்பாட்டம்!

திருவள்ளூர்: மத்திய அரசால் செய்யப்பட வேண்டிய ரயில்வே திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளதாக பாமக சார்பில் திருவள்ளூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பாமக கட்சியின் முக்கிய தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பாமக சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர்கள் ஆலப்பாக்கம் சேகர், கும்மிடிப்பூண்டி ரமேஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்பு துணைச் செயலாளர் நா.வெங்கடேசன் வரவேற்க, மாவட்ட செயலாளர் கே.என்.சேகர், தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் பாலயோகி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மத்திய அரசு தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வேவிற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும் , தென்னக ரயில்வே அதிக காலிப்பணியிடங்கள் உள்ளதால் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நிரப்பக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில பொது குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் ஏ.ஆர். டில்லிபாபு , பாமக மாவட்ட தலைவர்கள் ஞானப்பிரகாசம், விஜயன், ரமேஷ், அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பாமகவினர் பங்கேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:உரத்தட்டுப்பாட்டால் பருத்தி விவசாயிகள் கவலை

திருவள்ளூர்: மத்திய அரசால் செய்யப்பட வேண்டிய ரயில்வே திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளதாக பாமக சார்பில் திருவள்ளூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பாமக கட்சியின் முக்கிய தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பாமக சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர்கள் ஆலப்பாக்கம் சேகர், கும்மிடிப்பூண்டி ரமேஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்பு துணைச் செயலாளர் நா.வெங்கடேசன் வரவேற்க, மாவட்ட செயலாளர் கே.என்.சேகர், தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் பாலயோகி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மத்திய அரசு தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வேவிற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும் , தென்னக ரயில்வே அதிக காலிப்பணியிடங்கள் உள்ளதால் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நிரப்பக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில பொது குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் ஏ.ஆர். டில்லிபாபு , பாமக மாவட்ட தலைவர்கள் ஞானப்பிரகாசம், விஜயன், ரமேஷ், அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பாமகவினர் பங்கேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:உரத்தட்டுப்பாட்டால் பருத்தி விவசாயிகள் கவலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.