ETV Bharat / state

’குழந்தை மனது நோகக்கூடாதுனு இப்படி செஞ்சேன்’- நெகிழ வைக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்!

author img

By

Published : Jul 4, 2020, 2:42 PM IST

திருவள்ளூர்: குழந்தை என்னிடம் வந்து ’எங்க வீட்ல தண்ணீர் வரல’ என மழலைக் குரலில் கேட்டபோது மனது என்னவோ போல் ஆகிவிட்டது. வளரும் குழந்தையின் மனதில் ஏமாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன் என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத் மெல்லிய புன்னகையுடன்...

ஊராட்சி மன்றத் தலைவர்
ஊராட்சி மன்றத் தலைவர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத். இவர் வழக்கம் போல ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது 4 வயது சிறுமி ஹரிணி அங்கு சென்றிருக்கிறார். தன்னுடைய வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதை தன் மழலைக் குரலில் சம்பத்திடம் தெரிவித்துள்ளார். ஒரு சிறுமியின் புன்னகைக் கலந்த கோரிக்கையை ஏற்காமல் மறுதலிக்க ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்திற்கு மனமில்லை.

“நான்கு நாள்களுக்கு முன்னதாக ஹரிணி என்னிடம் தன்னுடைய வீட்டில் தண்ணீர் வரவில்லை, எங்களுக்கும் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார். ஒரு குழந்தையின் விண்ணப்பத்தை என்னால் நிராகரிக்க முடியவில்லை. ஒருவேளை குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாவிட்டால் சிறுமிக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். இவ்வளவு சின்ன வயதில் பெரிய ஏமாற்றமாகத் தெரியும் அக்குழந்தைக்கு, அதனால்தான் குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். அந்த சிறுமியை நோகடிக்க எனக்கு மனமில்லை. என்னைச் சந்திக்க வரும்போது ஹரிணி முகக்கவசம் அணியவில்லை. அதனால் அவளைச் சந்திக்கச் செல்லும்போது முகக்கவசங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டுவந்தேன்” என்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்.

குழந்தையின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஊராட்சி மன்றத் தலைவர்!

குழந்தையின் பிஞ்சு மனம் நொந்து போகக் கூடாது என்று நினைத்த சம்பத், துரித நடவடிக்கை மேற்கொண்டு அக்குழந்தையின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஏற்பாடுகளைச் செய்தார். அதோடு விடாமல் குழந்தையின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று குழந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினார். அவரது இந்நடவடிக்கை அப்பகுதியில் ஆச்சரியத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

முகக்கவசம் வழங்கும் ஊராட்சி மன்றத்தலைவர்
முகக்கவசம் வழங்கும் ஊராட்சி மன்றத்தலைவர்

இது குறித்து குழந்தையின் தந்தை சஞ்சய் கூறுகையில், ”எங்களுடைய துன்பத்தை காண சகிக்காது. என்னுடைய மகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரடியாகச் சென்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து எங்களுக்கு தெரியாது. ஊராட்சி மன்றத் தலைவர் எங்கள் வீட்டிற்கு வந்து இதைக் கூறிவிட்டு குழாய் இணைப்பு ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். சொன்னபடி, குடிநீர் இணைப்பு கிடைக்கப்பெற்றது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கிய எங்களுக்கு இது மிகப் பெரிய உதவி. அவருக்கு கோடானகோடி நன்றி” என்றார்.

நான்கு வயது குழந்தையின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, வெறும் நான்கு நாள்களில் குடிநீர் இணைப்பினை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படிங்க: பசியால் வாடும் மக்களுக்கு உதவும் லவ் பண்டல்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத். இவர் வழக்கம் போல ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது 4 வயது சிறுமி ஹரிணி அங்கு சென்றிருக்கிறார். தன்னுடைய வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதை தன் மழலைக் குரலில் சம்பத்திடம் தெரிவித்துள்ளார். ஒரு சிறுமியின் புன்னகைக் கலந்த கோரிக்கையை ஏற்காமல் மறுதலிக்க ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்திற்கு மனமில்லை.

“நான்கு நாள்களுக்கு முன்னதாக ஹரிணி என்னிடம் தன்னுடைய வீட்டில் தண்ணீர் வரவில்லை, எங்களுக்கும் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார். ஒரு குழந்தையின் விண்ணப்பத்தை என்னால் நிராகரிக்க முடியவில்லை. ஒருவேளை குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாவிட்டால் சிறுமிக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். இவ்வளவு சின்ன வயதில் பெரிய ஏமாற்றமாகத் தெரியும் அக்குழந்தைக்கு, அதனால்தான் குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். அந்த சிறுமியை நோகடிக்க எனக்கு மனமில்லை. என்னைச் சந்திக்க வரும்போது ஹரிணி முகக்கவசம் அணியவில்லை. அதனால் அவளைச் சந்திக்கச் செல்லும்போது முகக்கவசங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டுவந்தேன்” என்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்.

குழந்தையின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஊராட்சி மன்றத் தலைவர்!

குழந்தையின் பிஞ்சு மனம் நொந்து போகக் கூடாது என்று நினைத்த சம்பத், துரித நடவடிக்கை மேற்கொண்டு அக்குழந்தையின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஏற்பாடுகளைச் செய்தார். அதோடு விடாமல் குழந்தையின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று குழந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினார். அவரது இந்நடவடிக்கை அப்பகுதியில் ஆச்சரியத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

முகக்கவசம் வழங்கும் ஊராட்சி மன்றத்தலைவர்
முகக்கவசம் வழங்கும் ஊராட்சி மன்றத்தலைவர்

இது குறித்து குழந்தையின் தந்தை சஞ்சய் கூறுகையில், ”எங்களுடைய துன்பத்தை காண சகிக்காது. என்னுடைய மகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரடியாகச் சென்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து எங்களுக்கு தெரியாது. ஊராட்சி மன்றத் தலைவர் எங்கள் வீட்டிற்கு வந்து இதைக் கூறிவிட்டு குழாய் இணைப்பு ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். சொன்னபடி, குடிநீர் இணைப்பு கிடைக்கப்பெற்றது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கிய எங்களுக்கு இது மிகப் பெரிய உதவி. அவருக்கு கோடானகோடி நன்றி” என்றார்.

நான்கு வயது குழந்தையின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, வெறும் நான்கு நாள்களில் குடிநீர் இணைப்பினை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படிங்க: பசியால் வாடும் மக்களுக்கு உதவும் லவ் பண்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.