ETV Bharat / state

திருவள்ளூரில் கார் விபத்து - ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்! - thiruvallur latest news

திருவள்ளூர்: வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் மின் கம்பத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Thiruvallur
Thiruvallur
author img

By

Published : Dec 13, 2019, 9:25 AM IST

திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் - மீஞ்சூர் சாலை குன்றத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

அவ்வழியேச் சென்ற வாகன ஓட்டிகள் சம்வவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த காரின் ஓட்டுனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வண்டலூர் - மீஞ்சூர் சாலை

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திருநின்றவூர் பாலாஜி நகரைச் சேர்ந்த செந்தில்கனி(43) என்பதும் அவர் குடி போதையில் காரை ஓட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் உடன் வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆந்திராவில் கார் லாரி மோதி பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் - மீஞ்சூர் சாலை குன்றத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

அவ்வழியேச் சென்ற வாகன ஓட்டிகள் சம்வவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த காரின் ஓட்டுனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வண்டலூர் - மீஞ்சூர் சாலை

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திருநின்றவூர் பாலாஜி நகரைச் சேர்ந்த செந்தில்கனி(43) என்பதும் அவர் குடி போதையில் காரை ஓட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் உடன் வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆந்திராவில் கார் லாரி மோதி பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

Intro:குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மின் கம்பத்தின் மீது கார் மோதியதில் டிரைவர் காயம். உடன் வந்தவர் பலி.



Body:வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் குன்றத்தூர் அருகே வேகமாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் சாலைக்கும், பைபாசுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவரில் ஏறி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் நொறுங்கி சேதமடைந்தது. இதனை கண்டதும் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் காரை ஓட்டி வந்த டிரைவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார். டிரைவரின் அருகில் அமர்ந்து கொண்டு வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். Conclusion:விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திருநின்றவூர், பாலாஜி நகரை சேர்ந்த செந்தில்கனி(43), என்பதும் சாப்ட்வேர் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்துள்ளார். நேற்று மதியம் திருநின்றவூரில் இருந்து போதையில்
காரை ஓட்டி வந்துள்ளார். போதையில் கட்டுப்பாட்டை இழந்து காரை மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் காரில் உடன் வந்த நபர் யார் என்பது குறித்து அவருக்கு தெரியாததால் இறந்து போன நபர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்த செந்தில்கனி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.