திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணிக்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டபோது கையில் சூலாயுதம் ஏந்தியவாறு, தமிழ் எழுத்துகளால் செதுக்கப்பட்ட பழங்கால அம்மன் கல்வெட்டு மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அதனை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல், கடந்த ஆண்டு ஏழு கண் பாலத்தின் ஆற்றில் அம்மன், மகா விஷ்ணு, சிவன், நந்திகிருஷ்ணர் உள்ளிட்ட 16 கற்சிலைகள் பாலத்தின் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.