திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ - மாணவிகளுக்கு சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பு பயிற்சி அளித்தனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் குறித்து செயல்பாடுகள் தொடர்பாகவும் பள்ளிப் பாடங்களை எளிதாக கற்றுக் கொள்ளும் வழிமுறைகளையும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய விளையாட்டு முறைகளையும் பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பொன்னேரி அன்பு கரங்கள் சார்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லேட் அடங்கிய பரிசுத் தொகுப்பினை அதன் உரிமையாளர் தயாநிதி வழங்கினார். வைஷ்ணவ் கல்லூரி பேராசிரியர் கௌரி பிரியங்கா உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியா முழுவதும் பயிலும் 1.42 லட்சம் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து சாதனை