ETV Bharat / state

மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு -11 பேர் படுகாயம்!

author img

By

Published : Feb 17, 2021, 2:06 PM IST

திருவள்ளூர்: அகரம்பாக்கம் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

mini-truck-overturns-1-killed-11-injured
mini-truck-overturns-1-killed-11-injured

கள்ளக்குறிச்சியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் அகரம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் பணிபுரிய கூலித்தொழிலாளர்கள் மினி லாரியில் இருந்துவந்துள்ளனர். அப்போது வண்டலூர் - மீஞ்சூர் புறவழி சாலையைக் கடக்க முயன்ற போது மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கள்ளக்குறிச்சி பாசார் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மினி லாரியில் பயணித்த 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளவேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாராயம் விற்பனை: மூவர் கைது!

கள்ளக்குறிச்சியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் அகரம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் பணிபுரிய கூலித்தொழிலாளர்கள் மினி லாரியில் இருந்துவந்துள்ளனர். அப்போது வண்டலூர் - மீஞ்சூர் புறவழி சாலையைக் கடக்க முயன்ற போது மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கள்ளக்குறிச்சி பாசார் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மினி லாரியில் பயணித்த 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளவேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாராயம் விற்பனை: மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.