ETV Bharat / state

வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை: அடையாளம் தெரியாத கும்பலுக்கு வலைவீச்சு!

author img

By

Published : Feb 3, 2020, 7:31 AM IST

திருவள்ளூர்: குன்றத்தூர் அருகே ரவுடி ஒருவர் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குக் காரணமான கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Kundrathur  rowdy murder
Kundrathur rowdy murder

குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் இளைஞர் ஒருவரை அடையளம் தெரியாத சிலர் சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதனைக் கண்டு திடுக்கிட்டுப்போன அப்பகுதி மக்கள் குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடம் வந்த காவல் துறையினர் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனை அனுப்பிவிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், "கொலைசெய்யப்பட்ட மதுராந்தகத்தைச் சேர்ந்த முருகன் (37), இவரது மனைவி பாண்டியம்மாளுடன் சில மாதங்களாக இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிக்கிறார்.

நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர்

இந்நிலையில், நேற்றிரவு மனைவி, பிள்ளைகளைக் காண முருகன் அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். தந்தையைக் கண்ட குழந்தைகள் தாயை அழைத்துவர வீட்டை விட்டு வெளியேறினர்.

அப்போது, அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கு காரில் வந்துள்ளது. அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கதவின் மீது வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில், கதவு வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, வெளியே வந்து விழுந்த முருகனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்" எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் மீது மதுராந்தகம் பகுதியில் குற்ற வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாகக் கொலைசெய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? உள்ளிட்ட கோணங்களில் குன்றத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு !

குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் இளைஞர் ஒருவரை அடையளம் தெரியாத சிலர் சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதனைக் கண்டு திடுக்கிட்டுப்போன அப்பகுதி மக்கள் குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடம் வந்த காவல் துறையினர் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனை அனுப்பிவிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், "கொலைசெய்யப்பட்ட மதுராந்தகத்தைச் சேர்ந்த முருகன் (37), இவரது மனைவி பாண்டியம்மாளுடன் சில மாதங்களாக இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிக்கிறார்.

நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர்

இந்நிலையில், நேற்றிரவு மனைவி, பிள்ளைகளைக் காண முருகன் அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். தந்தையைக் கண்ட குழந்தைகள் தாயை அழைத்துவர வீட்டை விட்டு வெளியேறினர்.

அப்போது, அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கு காரில் வந்துள்ளது. அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கதவின் மீது வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில், கதவு வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, வெளியே வந்து விழுந்த முருகனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்" எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் மீது மதுராந்தகம் பகுதியில் குற்ற வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாகக் கொலைசெய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? உள்ளிட்ட கோணங்களில் குன்றத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு !

Intro:குன்றத்தூர் அருகே ரவுடி வெடிகுண்டு வீசி வெட்டிப்படுகொலை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை.Body:குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் வெடிச்சத்தம் கேட்டது அந்த பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அங்கிருந்த வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுராந்தகத்தில் சேர்ந்த முருகன்(37), என்பது தெரியவந்தது. இவரது மனைவி பாண்டியம்மாள் சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வந்திருப்பது தெரியவந்தது. பாண்டியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார் வீட்டிற்கு வந்த முருகனை கண்டதும் அவரது பிள்ளைகள் தனது தாயை அழைத்து வர இரண்டு பிள்ளைகளும் சென்றுவிட்டனர். Conclusion:அப்போது காரில் வந்த மர்ம கும்பலை கண்டதும் முருகன் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் கையில் வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கதவின் மீது வீசி வெடிக்க வைத்துள்ளனர். இதில் கதவு வெடித்து சிதறியது. இதையடுத்து செய்வதறியாமல் நிலை தடுமாறி வெளியே வந்து விழுந்த முருகனை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு 7 பேர் கொண்ட கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் முருகன் மீது மதுராந்தகம் பகுதியில் வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நீண்ட நாளாக முருகனை பின் தொடர்ந்து தற்போது இங்கு வந்திருப்பது தெரியவந்ததால் கொலை செய்துள்ளனர். பழந்தண்டலம் பகுதியில் வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.