ETV Bharat / state

பூண்டி, பழவேற்காடு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை! - thiruvallur dsp announce

திருவள்ளூர்: காணும் பொங்கலை முன்னிட்டு பூண்டி பழவேற்காடு போன்ற நீர்த்தேக்கங்களில், மக்கள் யாரும் தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

thiruvallur
thiruvallur
author img

By

Published : Jan 17, 2020, 3:05 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பழவேற்காடு கடல் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு மகிமை மாதா ஆலயம், 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நிழல் கடிகாரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் உள்ளன.

அதனோடு, பறவைகள் சரணாலயத்தைக் காண படகுகளில் சவாரி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் படகு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே பழவேற்காடு கடலில் படகு சவாரி செய்ய காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இன்று ஒருநாள் பழவேற்காட்டைச் சுற்றிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூரில் காவல் துறை பாதுகாப்புத் தீவிரம்

100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடாத மக்கள்; தனிநபராகக் கொண்டாடும் ஆசிரியர்!

இதேபோன்று, பூண்டி நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் உள்ள பூங்காக்கள், தண்ணீரில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் குடிமகன்களைக் கைதுசெய்ய மாற்று உடைகளில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பழவேற்காடு கடல் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு மகிமை மாதா ஆலயம், 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நிழல் கடிகாரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் உள்ளன.

அதனோடு, பறவைகள் சரணாலயத்தைக் காண படகுகளில் சவாரி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் படகு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே பழவேற்காடு கடலில் படகு சவாரி செய்ய காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இன்று ஒருநாள் பழவேற்காட்டைச் சுற்றிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூரில் காவல் துறை பாதுகாப்புத் தீவிரம்

100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடாத மக்கள்; தனிநபராகக் கொண்டாடும் ஆசிரியர்!

இதேபோன்று, பூண்டி நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் உள்ள பூங்காக்கள், தண்ணீரில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் குடிமகன்களைக் கைதுசெய்ய மாற்று உடைகளில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி பழவேற்காடு போன்ற நீர்த்தேக்கங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மக்கள் யாரும் தண்ணீரில் குளிக்க கூடாது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Body:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி பழவேற்காடு போன்ற நீர்த்தேக்கங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மக்கள் யாரும் தண்ணீரில் குளிக்க கூடாது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடல் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது சுற்றுலா தலமான இங்கு மகிமை மாதா ஆலயம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிழல் கடிகாரம் கலங்கரை விளக்கம் இதை காண பல்லாயிரம் பேர் கூடுவார்கள் என்றும் பறவைகள் சரணாலயத்தை காண படகுகளில் சவாரி மேற்கொள்வார்கள் இதனால் படகு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனவே பழவேற்காடு கடலில் படகு சவாரியை போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் பழவேற்காடு சுற்றிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது திடீரென்று தண்ணீரில் மூழ்கியுள்ள மிகவும் பிடிக்கும் நீச்சல் தெரிந்த மீனவர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன காணும் பொங்கலை முன்னிட்டு பொன்னேரி டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஈடுபட்டுள்ளன இதேபோல் பூண்டி நீர்த்தேக்கத்தின் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பூண்டி நீர்த்தேக்கத்தின் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் உள்ள பூங்காக்கள் மற்றும் தண்ணீரில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் குடிமகன்களை கைது செய்ய மாற்று உடைகளில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.