திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சங்கர் (35). இவர் திருத்தணி பைபாஸ் சாலையில் வெல்டிங் வைக்கும் பணியைச் செய்து வந்தார். அப்போது அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது சென்னையிலிருந்து ரேணிகுண்டா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர், சங்கரின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.