ETV Bharat / state

திருத்தணியில் சரக்கு ரயில் மோதி ஒருவர் பலி! - திருத்தணி

திருவள்ளூர்: திருத்தணியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒருவர் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருத்தணியில் சரக்கு ரயில் மோதி ஒருவர் பலி!
author img

By

Published : Apr 25, 2019, 5:03 PM IST

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சங்கர் (35). இவர் திருத்தணி பைபாஸ் சாலையில் வெல்டிங் வைக்கும் பணியைச் செய்து வந்தார். அப்போது அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது சென்னையிலிருந்து ரேணிகுண்டா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர், சங்கரின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சங்கர் (35). இவர் திருத்தணி பைபாஸ் சாலையில் வெல்டிங் வைக்கும் பணியைச் செய்து வந்தார். அப்போது அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது சென்னையிலிருந்து ரேணிகுண்டா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர், சங்கரின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:திருத்தணியில் சரக்கு ரயில் மோதி ஊழியர் பலி


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஊழியர் மீது சரக்கு ரயில் மோதி பலியானார். திருத்தணி அடுத்த காசி நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், மகன் சங்கர் 35. இவர் திருத்தணி பைபாஸ் சாலையில் வெல்டிங் வைக்கும் பணியை செய்து வந்தார். அப்போது அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிர் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கர் பிணத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு அமுலு என்ற மனைவியும், மதன்குமார் 12, ஷாலினி 11 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.