ETV Bharat / state

காலாவதியான மாத்திரை வழங்கிய அரசு மருத்துவர்: வயிற்று வலியால் துடித்த பெண்!

author img

By

Published : Dec 19, 2019, 3:40 AM IST

திருவள்ளூர்: சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு காலாவதியான மாத்திரையை மருத்துவர் கொடுத்ததால், அப்பெண் வயிற்று வலியில் துடித்துள்ளார்.

காலாவதியான மாத்திரைகள்
காலாவதியான மாத்திரைகள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 17ஆம் தேதி இரவு உடல் நலம் சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர், அப்பெண்ணை பரிசோதனை செய்ததில், வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உடலில் இருந்து வெளியேறுவதைக் கண்டறிந்துள்ளார். அதற்கான மாத்திரைகளை வழங்கியுள்ளார்.

இந்த மாத்திரையை உட்கொண்ட பெண், சிறிது நேரத்திற்குப் பிறகு கடும் வயிற்று வலியால் துடி துடித்துள்ளார். பின்னர், அங்கிருந்த செவிலி ஒருவர், அப்பெண் சாப்பிட்ட மாத்திரையை காண்பிக்குமாறு கேட்டு, மாத்திரையைப் பார்த்ததும் செவிலி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த மாத்திரைகள் சாப்பிட வேண்டாம், இது காலாவதியான மாத்திரைகள் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட பெண் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்.

காலாவதியான மாத்திரை வழங்கிய அரசு மருத்துவர்

இதுகுறித்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகள் உள்ளிட்ட காலாவதியான மாத்திரைகள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் எதுவும் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளனர்.

இதுபோன்று, அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் காலாவதியான மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுப்பதன் மூலம் பல உயிர்கள் பலியாக வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை நிர்வாகம் காலாவதியான மாத்திரைகளை அழித்துவிடவேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காலாவதியாகாத மருந்து மாத்திரைகள் சாலையோரம் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 17ஆம் தேதி இரவு உடல் நலம் சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர், அப்பெண்ணை பரிசோதனை செய்ததில், வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உடலில் இருந்து வெளியேறுவதைக் கண்டறிந்துள்ளார். அதற்கான மாத்திரைகளை வழங்கியுள்ளார்.

இந்த மாத்திரையை உட்கொண்ட பெண், சிறிது நேரத்திற்குப் பிறகு கடும் வயிற்று வலியால் துடி துடித்துள்ளார். பின்னர், அங்கிருந்த செவிலி ஒருவர், அப்பெண் சாப்பிட்ட மாத்திரையை காண்பிக்குமாறு கேட்டு, மாத்திரையைப் பார்த்ததும் செவிலி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த மாத்திரைகள் சாப்பிட வேண்டாம், இது காலாவதியான மாத்திரைகள் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட பெண் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்.

காலாவதியான மாத்திரை வழங்கிய அரசு மருத்துவர்

இதுகுறித்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகள் உள்ளிட்ட காலாவதியான மாத்திரைகள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் எதுவும் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளனர்.

இதுபோன்று, அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் காலாவதியான மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுப்பதன் மூலம் பல உயிர்கள் பலியாக வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை நிர்வாகம் காலாவதியான மாத்திரைகளை அழித்துவிடவேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காலாவதியாகாத மருந்து மாத்திரைகள் சாலையோரம் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Intro:திருத்தணி அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு காலாவதியான மாத்திரைகள் வழங்கியதால் பரபரப்பு.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் உள்ள 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 17 ஆம் தேதி இரவு உடல் நலம் சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கு சென்றிருந்தனர். இன்று அங்கிருந்த மருத்துவர் அந்த பெண்ணை பரிசோதனை செய்து பார்த்த போது வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உடலில் இருந்து வெளியேறுவதை கண்டறிந்து அதற்கான மாத்திரைகள் மற்றும் பவுடர் வழங்கினார். இந்த மாத்திரை உட்கொண்ட பின் சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடி துடித்தனர். பின்னர் அங்கிருந்த செவிலியர் ஒருவர் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சாப்பிட்ட மாத்திரையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். மாத்திரையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த செவிலியர் இந்த மாத்திரைகள் சாப்பிட வேண்டாம் இந்த மாதிரி காலாவதியான மாத்திரைகள் என கூறியதால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபோன்று காலாவதியான மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் விநியோகம் செய்வதால் பரபரப்பு ஏற்படுகிறது. மேலும் பல உயிர்கள் பலியாகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே அரசு மருத்துவமனை நிர்வாகம் காலாவதியான மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடாது என அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட காலாவதியான மாத்திரைகளை மூன்று அட்டைகள் மட்டும் இருந்தன, ஒரு அட்டை மட்டும் கொடுத்தோம், இரண்டு அட்டைகளையும் அழித்துவிட்டோம். இனி இதுபோல் தவறுகள் எதுவும் நடக்காது என்றனர் மருத்துவமனை நிர்வாகம்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.