ETV Bharat / state

ரயில் விபத்தில் உயிரிழந்த மகனைப் பார்த்த தந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை! - train accident

திருவள்ளூர்: ரயில் விபத்தில் உயிரிழந்த மகனைப் பார்த்து தந்தை ரயின்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூ
author img

By

Published : May 3, 2019, 11:21 PM IST

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் - கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு சுரேந்தர் (24), ஷாலினி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேந்தர் இஞ்சினியரிங் முடிந்துவிட்டு சென்னையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையிலிருந்து வீடு வந்த சுரேந்தர், நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து திரும்புகையில், திருநின்றவூர் - வேப்பம்பட்டு ரயில் நிலைய தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக ரயில்மோதி சம்பவ இடைத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதனிடையே சுரேந்தர் வீடு வராததால் தேடி வந்த அவரது தந்தை கோபால், மகன் ரயில் விபத்தில் உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகன் இறந்த துயரம் தாங்காமல் அங்கேயே ரயில்முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். தந்தை, மகன் இருவரும் இறந்த செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த மனைவி, மகள் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனைத் தடுத்து ரயில்வே போலீஸார் உறவினர்களிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் போலீஸார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தை, மகன் இருவரும் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் - கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு சுரேந்தர் (24), ஷாலினி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேந்தர் இஞ்சினியரிங் முடிந்துவிட்டு சென்னையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையிலிருந்து வீடு வந்த சுரேந்தர், நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து திரும்புகையில், திருநின்றவூர் - வேப்பம்பட்டு ரயில் நிலைய தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக ரயில்மோதி சம்பவ இடைத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதனிடையே சுரேந்தர் வீடு வராததால் தேடி வந்த அவரது தந்தை கோபால், மகன் ரயில் விபத்தில் உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகன் இறந்த துயரம் தாங்காமல் அங்கேயே ரயில்முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். தந்தை, மகன் இருவரும் இறந்த செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த மனைவி, மகள் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனைத் தடுத்து ரயில்வே போலீஸார் உறவினர்களிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் போலீஸார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தை, மகன் இருவரும் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

03-05-2019


திருவள்ளூர் மாவட்டம்


திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சத்திரம் பஜ்ரங் கல்லூரி சாலையை சேர்ந்தவர் கோபால் (வயது 51). அதே பகுதியில் டி.வி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கு கோகிலா (44) என்ற மனைவியும், சுரேந்தர்(24) என்ற மகனும், ஷாலினி(23) என்ற மகளும் இருந்தனர்.

சுரேந்தர் என்ஜினீயரிங் படித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஷாலினிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேந்தர் திருநின்றவூர்-வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்து போனார். இதற்கிடையே சுரேந்தர் வீட்டிற்கு வராததால் அவரை பல இடங்களில் கோபால் தேடினார்.

இந்த நிலையில் வேப்பம்பட்டு அருகே தனது மகன் சுரேந்தர் ரெயில் மோதி இறந்து கிடப்பதை பார்த்த கோபால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். தனது மகன் இல்லாமல் தான் மட்டும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்? என்று கோபால் நினைத்தார்.

வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்த அவர், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கணவன், மகன் இறந்த தகவல் கேட்டு கோகிலா மற்றும் அவரது மகள் ஷாலினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

அப்போது அவர்கள் இனிமேல் நாங்களும் உயிருடன் இருந்து என்ன பயன்? எனக்கூறி தாயும்-மகளும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள ஓடினார்கள். அப்போது அங்கிருந்த ரெயில்வே போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறினார்கள். பின்னர் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் இருவரையும் பத்திரமாக ஒப்படைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில் மோதி மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேப்பம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.