ETV Bharat / state

அயோத்தி தீர்ப்பு எதிரொலி: சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு விடுதியில் அறை வழங்க கூடாது

திருவள்ளூர்: அயோத்தி தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாவதற்கான வாய்ப்புள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு விடுதியில் அறை வழங்க கூடாது என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 7, 2019, 11:58 PM IST

Don't reserve rooms for doubtful persons

அயோத்தி தீர்ப்பு வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய வளாகத்தில், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர், “அயோத்தி சம்பந்தமான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அசம்பாவிதச் சம்பங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசும் காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன்

இதில் முன்பின் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகப்படும் வகையில் இருக்கும் நபர்கள் ஆகியோர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறை ஒதுக்கக் கூடாது. மேலும், அது தொடர்பான தகவலை உடனே அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.

மேலும், தங்கும் விடுதிகளில் தங்குவோரின் முழு விவரங்களான ஆதார் அட்டை, கைபேசி எண் போன்ற விவரங்களை பெற வேண்டும். அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில், பெட்ரோலை சில்லரையாக பாட்டில்களில் கொடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அயோத்தியா வழக்கு குறித்து கருத்துகள் வெளியிட வேண்டாம்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

அயோத்தி தீர்ப்பு வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய வளாகத்தில், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர், “அயோத்தி சம்பந்தமான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அசம்பாவிதச் சம்பங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசும் காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன்

இதில் முன்பின் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகப்படும் வகையில் இருக்கும் நபர்கள் ஆகியோர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறை ஒதுக்கக் கூடாது. மேலும், அது தொடர்பான தகவலை உடனே அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.

மேலும், தங்கும் விடுதிகளில் தங்குவோரின் முழு விவரங்களான ஆதார் அட்டை, கைபேசி எண் போன்ற விவரங்களை பெற வேண்டும். அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில், பெட்ரோலை சில்லரையாக பாட்டில்களில் கொடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அயோத்தியா வழக்கு குறித்து கருத்துகள் வெளியிட வேண்டாம்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

Intro:07-11-2019

திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கான வாய்ப்புள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் : சந்தேகமாக உள்ள நபர்களுக்கு விடுதிகளில் அறை ஒதுக்கவோ, பெட்ரோல் நிலையங்களில் சில்லரையாக கேன்களில் தரக்கூடாது என உரிமையாளர்களை துணைக்காவல் கண்காணிப்பாளர் கங்கதாரன் கேட்டுக் கொண்டார் :

Body:07-11-2019

திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கான வாய்ப்புள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் : சந்தேகமாக உள்ள நபர்களுக்கு விடுதிகளில் அறை ஒதுக்கவோ, பெட்ரோல் நிலையங்களில் சில்லரையாக கேன்களில் தரக்கூடாது என உரிமையாளர்களை துணைக்காவல் கண்காணிப்பாளர் கங்கதாரன் கேட்டுக் கொண்டார் :

அயோத்தி தீர்ப்பு வரும் 12 முதல் 14 க்குள் நீதிமன்றத்தில் வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு காவல் துணைக்கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமை வகித்து பேசுகையில், அயோத்தி சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அசம்பாவிதச் சம்பங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்பின் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகம்படும் வகையில் இருந்தால் அவர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறை ஒதுக்க கூடாது. மேலும், அது தொடர்பான தகவலை உடனே அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அது தொடர்பாக உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனத்திற்கு பெட்ரோல் அளிப்பதோடு, சில்லரையாக பாட்டில்களில் கொடுக்க கூடாது. மேலும், தங்கும் விடுதிகளில் தங்குவோரின் முழு விவரங்களான ஆதார் அட்டை மற்றும் செல்லிடப்பேசி எண் போன்ற விவரங்களை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் நிலைய ஆய்வாளர்கள் மகேஸ்வரி, தமிழ்வானன், கண்ணபிரான் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.