திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, நிலவரங்கள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார். அதன்படி,
- திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 53ஆக உள்ளது. இதில் ஆண்கள் 32 பேர், பெண்கள் 14 பேர், குழந்தைகள் ஏழு பேர் ஆவர்.
- கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மொத்தம் 14 பேர் ஆவர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 39 பேர்.
- இதுவரை மொத்தம் 1,701 நபர்கள், கரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனையில் தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டவர்கள் மொத்தம் 1,158 நபர்கள்.
- நகர்ப்புறங்களில் ஏழு தனிமைப்படுத்தும் பகுதிகள், கிராமப் பகுதிகளில் 12 தனிமைப்படுத்தும் பகுதிகள் என மொத்தம் 19 தனிமைப்படுத்தும் பகுதிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
- 28 நாள்கள்வரை வீட்டிற்குள்ளேயே முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் என்ணிக்கை 3,998.
- திருவள்ளூர் மாவட்ட காவலர் பயிற்சிக் கட்டடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 75.
- திருத்தணி கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 49.
- பூவிருந்தவல்லி பொது சுகாதார நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 21 எனத் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்னென்ன உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? - சென்னை மாநகராட்சி வெளியீடு