ETV Bharat / state

ஆவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு! - அயப்பாக்கம் ஊராட்சியில் டெங்கு பாதிப்பு அதிகம்

சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெங்கு பாதிப்பு தீவிரம்
author img

By

Published : Oct 2, 2019, 2:33 PM IST

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில், வசித்து வருபவர்கள் மணிமாறன், பவானி தம்பதியினர். இவர்களின் மகன் இனியன் (7). கடந்த சில தினங்களாகவே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இனியன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த சூழலில் காய்ச்சல் தீவிரமானதைத் தொடர்ந்து அச்சிறுவனின் பெற்றோர் நேற்று சிறுவனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காததால் இனியன் உயிரிழந்தார்.

அயப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாததாலும், தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுவதாலும், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்ககூடிய பலரும் டெங்கு, சிக்கன் குனியா போன்ற மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவரும் சுகாதரத் துறை அலுவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுநலச்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இதையும் படியுங்க:

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில், வசித்து வருபவர்கள் மணிமாறன், பவானி தம்பதியினர். இவர்களின் மகன் இனியன் (7). கடந்த சில தினங்களாகவே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இனியன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த சூழலில் காய்ச்சல் தீவிரமானதைத் தொடர்ந்து அச்சிறுவனின் பெற்றோர் நேற்று சிறுவனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காததால் இனியன் உயிரிழந்தார்.

அயப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாததாலும், தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுவதாலும், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்ககூடிய பலரும் டெங்கு, சிக்கன் குனியா போன்ற மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவரும் சுகாதரத் துறை அலுவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுநலச்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இதையும் படியுங்க:

சேலம் மாவட்டத்தில் ஆறுபேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

திருப்பூரில் பரவும் வைரஸ் காய்ச்சல்; 40 பேருக்கு சிகிச்சை!

Intro:அயப்பாக்கம் ஊராட்சியில்  மர்ம காய்ச்சலுக்கு 7வயது சிறுவன் பலி- சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பு- அதிகாரிகள் அலட்சியம்Body:அயப்பாக்கம் ஊராட்சியில்  மர்ம காய்ச்சலுக்கு 7வயது சிறுவன் பலி- சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பு- அதிகாரிகள் அலட்சியம்.


ஆவடி அடுத்த அயப்பாக்கம், அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு  இனியன் (7) என்ற மகன் உள்ளார். இதற்கிடையில் இனியன் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்து உள்ளான். இதனை அடுத்து, அவனை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் இனியனுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனை அடுத்து நேற்று அவனை பெற்றோர் அழைத்து கொண்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை சேர்த்து உள்ளனர். அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இனியன் பரிதாபமாக இறந்தான். இதனையடுத்து பெற்றோர் குழந்தையின் சடலத்தை கட்டி பிடித்து கதறி அழுதனர். அயப்பாக்கம் ஊராட்சியில் 15வார்டுகள் உள்ளன. இங்கு பல தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் குப்பைகள் நனைந்து துர்நாற்றம் வீசுகின்றன. மேலும், பல தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.  இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இவைகள் கடித்து பெரியவர் முதல் சிறியவர் வரை டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அங்கு சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் தொடர்ந்து நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது. எனவே,  வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அயப்பாக்கம் ஊராட்சியில் சுகாதார பணிகளை தீவிரபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம்  என பொதுநலச்சங்கங்கள் எச்சரிக்கின்றன.*Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.