ETV Bharat / state

கரோனா எதிரொலி: மாநில எல்லைகளில் சோதனையைத் தீவிரப்படுத்திய காவல் துறை!

author img

By

Published : Jun 14, 2020, 10:34 PM IST

திருவள்ளூர் : தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லைகளில் சோதனைகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Corona echo: Police intensify raid on state borders!
Corona echo: Police intensify raid on state borders!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் இருக்கும் சோதனைச்சாவடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் இ-பாஸ் வைத்திருக்கும் வாகனங்களை மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களை முறையான இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கின்றனர்.

அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு அல்லது மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இ-பாஸ் இல்லை என்றால், திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோன்று மாஸ்க் அணியாமல் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லைகளிலுள்ள மருத்துவர்கள், செவிலியர் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால், அந்த இடத்தில் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியரை பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் இருக்கும் சோதனைச்சாவடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் இ-பாஸ் வைத்திருக்கும் வாகனங்களை மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களை முறையான இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கின்றனர்.

அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு அல்லது மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இ-பாஸ் இல்லை என்றால், திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோன்று மாஸ்க் அணியாமல் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லைகளிலுள்ள மருத்துவர்கள், செவிலியர் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால், அந்த இடத்தில் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியரை பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.