ETV Bharat / state

மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்!

திருவள்ளூர்: திருவலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய பதினோரு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

author img

By

Published : Apr 30, 2019, 4:58 PM IST

மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்!

திருத்தணி வட்டத்தில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. காவல்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தலைத் தடுத்து வந்தாலும், மணல் கடத்தல் இன்றளவும் ஓயவில்லை. மணல் தட்டுப்பாடு அதிகம் ஏற்படுவதால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாட்டு வண்டி மூலம் கொசஸ்தலை ஆற்றில் ஆங்காங்கே திருட்டு மணல் எடுக்கப்பட்டு, மறைமுகமாக விற்பனை நடந்து வருகிறது. இத்தகவலைக் கொண்டு ஆய்வு செய்த தனிப்படை, ஒரு மாட்டு வண்டி மாதத்திற்கு ரூ.4000 வாடகைக்கு செல்வதாக்கத் தகவல் கிடைத்தது.

ஒரு மாட்டு வண்டிக்குக் காவல்நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.700 கொடுத்துவிட்டு மணல் கடத்துவதாகத் தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குச் சென்று, ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் தப்பியோடி நிலையில், 3 பேரைத் துரத்திப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி வட்டத்தில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. காவல்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தலைத் தடுத்து வந்தாலும், மணல் கடத்தல் இன்றளவும் ஓயவில்லை. மணல் தட்டுப்பாடு அதிகம் ஏற்படுவதால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாட்டு வண்டி மூலம் கொசஸ்தலை ஆற்றில் ஆங்காங்கே திருட்டு மணல் எடுக்கப்பட்டு, மறைமுகமாக விற்பனை நடந்து வருகிறது. இத்தகவலைக் கொண்டு ஆய்வு செய்த தனிப்படை, ஒரு மாட்டு வண்டி மாதத்திற்கு ரூ.4000 வாடகைக்கு செல்வதாக்கத் தகவல் கிடைத்தது.

ஒரு மாட்டு வண்டிக்குக் காவல்நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.700 கொடுத்துவிட்டு மணல் கடத்துவதாகத் தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குச் சென்று, ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் தப்பியோடி நிலையில், 3 பேரைத் துரத்திப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய பதினோரு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தனர்.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தனர் 10க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம். 3 பேர் கைது .

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. போலீசாரும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு மணல் கடத்தல் தடுப்பு வந்தாலும் மணல் கடத்தல் இன்றளவும் ஓயவில்லை இரவு பகலாக மணல் திருடப்பட்டு தான் வருகிறது ..

மணல் தட்டுப்பாடு அதிகம் ஏற்படுவதால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாட்டு வண்டி மூலம் கொசஸ்தலை ஆற்றில் ஆங்காங்கே திருட்டு மணல் எடுக்கப்பட்டு மறைமுகமாக விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் திருத்தணி தாலுகாவில் ஒரத்தூர் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக திருவலங்காடு காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. ஒரு மாட்டு வண்டி மாதத்திற்கு 4000ரூபாயும் மற்றும் போலீசார் ஒரு நாளைக்கு ஒரு மாட்டு வண்டிக்கு காவல்நிலையத்திற்கு 700 ரூபாய் கொடுத்துவிட்டு மணல் கடத்துவதாக தனிப்படை மூலம் போலீசாருக்கு கிடைத்த தகவல் .ரகசிய தகவலையடுத்து ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பதினோரு மாட்டு வண்டிகளில் ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றபோது 10க்கும் மேற்பட்டோர் தப்பியோடினார்கள் துரத்திப் பிடித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 11 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன .

ETVசெய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு


visual ftp


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.