ETV Bharat / state

'காற்றில்கூட ஊழல் செய்தது திமுக' -சரத்குமார்

author img

By

Published : Apr 1, 2019, 10:52 AM IST

திருவள்ளூர்: காற்றலைகளைக்கூட காசாக்க முடியுமா? என்று யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனது பரப்புரையில் விமர்சித்தார்.

TN Election

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும், 18சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேணுகோபால், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து சரத்குமார்பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், 'காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிடவற்றைத் தீர்க்க மத்தியில் அங்கம் வகித்தால்தான் மாநிலத்துக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்' என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் 'எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறி வருகிறார். ஆனால், சந்தர்ப்பவாதம் எங்கு இருக்கிறது என்றால்,உலகம் அறியாத மிகப்பெரிய ஊழல் என்ற சாதனையைப் படைத்த கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். காற்றலைகளை காசாக்க முடியும் என்று யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம். இதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ் ஆட்சிதான் என குற்றஞ்சாட்டிப் பேசினார்.

இந்தப் பிரசாரத்தில் அமைச்சர் பெஞ்சமின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும், 18சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேணுகோபால், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து சரத்குமார்பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், 'காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிடவற்றைத் தீர்க்க மத்தியில் அங்கம் வகித்தால்தான் மாநிலத்துக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்' என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் 'எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறி வருகிறார். ஆனால், சந்தர்ப்பவாதம் எங்கு இருக்கிறது என்றால்,உலகம் அறியாத மிகப்பெரிய ஊழல் என்ற சாதனையைப் படைத்த கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். காற்றலைகளை காசாக்க முடியும் என்று யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம். இதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ் ஆட்சிதான் என குற்றஞ்சாட்டிப் பேசினார்.

இந்தப் பிரசாரத்தில் அமைச்சர் பெஞ்சமின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Intro:காற்றாலைகளை kaushik முடியும் என்று யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது ஆவடி முன்னேற்ற கழகம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திருவள்ளூரில் காட்டமாக பேசினார்


Body:திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேணுகோபால் வேட்பாளர்களை ஆதரித்து பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியநாதன் ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் .

அப்போது பேசிய அவர் காவிரி பிரச்சினை முல்லைப் பெரியாறு தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவற்றை தீர்க்க மத்தியில் அங்கம் வகித்தால் தான் மாநிலத்துக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும் அதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .பின்னர் தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறி வருகிறார். ஆனால் சந்தர்ப்பவாதம் எங்கு இருக்கிறது. என்றால் பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மிகுந்த ஆட்சி உலகத்திலேயே உலகம் அறியாத மிகப்பெரிய ஊழல் என்ற சாதனையைப் படைத்த கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான் காற்றாலைகளில் காசாக்க முடியும் என்று யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது .திராவிட முன்னேற்ற கழகம். இதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ் ஆட்சிதான் என குற்றம் சாட்டிப் பேசினார் மேலும் காங்கிரஸ் ஆட்சியில் நமக்கு செய்த துரோகங்கள் பல அதில் காவிரி நதிநீர்ப் பிரச்சினை நினைத்திருந்தால் கர்நாடகாவில் புரிந்த காங்கிரஸ் நதி நீர் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கலாம். ஈழத்தில் படுகொலைகள் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி அதற்கு உறுதுணையாக இருந்த திராவிட முன்னேற்ற கழகம் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால். காங்கிரஸ் ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாம் ஆனால் அவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கட்சி அழுத்தும் தரவில்லை பதவி சுகத்துக்காகவும் ஊழல் மிகுந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த காரணத்தினால் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி உருவாக்கியவர்கள். எங்களை சந்தர்ப்பவாத கூட்டணி என்று ஸ்டாலின் கூறுவதா என பேசினார். இந்தப் பிரச்சாரத்தில் அமைச்சர் பெஞ்சமின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தனர் .

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.