ETV Bharat / state

மதுபான பார்களில் கள்ள மது விற்பனை- 30பேர் கைது

author img

By

Published : Oct 20, 2019, 4:33 AM IST

திருவள்ளூர்: அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 30பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபான பார்களில் சோதனை மேற்கொள்ளும் தனிப்படை காவல் துறையினர்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுபான பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து கூடுதல் கமிஷனர் தினகரன், தனிப்படை அமைத்து மதுபான பார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

தனிப்படை காவல்துறையினர் பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, குன்றத்தூர், போரூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் மதுபான பார்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் அனைத்து பார்களிலும் கள்ளச்சந்தையில் மது பானங்கள் 24 மணி நேரமும் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மதுபானங்கள் விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுபான பார்களில் சோதனை மேற்கொள்ளும் தனிப்படை காவல் துறையினர்

மேலும் ரூ. 2லட்சத்து 30 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்தந்தப் பகுதி காவல்நிலையங்களில் அவர்களை ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:மளிகை கடையில் போதை பொருட்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுபான பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து கூடுதல் கமிஷனர் தினகரன், தனிப்படை அமைத்து மதுபான பார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

தனிப்படை காவல்துறையினர் பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, குன்றத்தூர், போரூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் மதுபான பார்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் அனைத்து பார்களிலும் கள்ளச்சந்தையில் மது பானங்கள் 24 மணி நேரமும் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மதுபானங்கள் விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுபான பார்களில் சோதனை மேற்கொள்ளும் தனிப்படை காவல் துறையினர்

மேலும் ரூ. 2லட்சத்து 30 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்தந்தப் பகுதி காவல்நிலையங்களில் அவர்களை ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:மளிகை கடையில் போதை பொருட்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை

Intro:அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனை. கள்ள சந்தையில் மது விற்ற 30 க்கும் மேற்பட்டோர் கைது. ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல்Body:அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனை. கள்ள சந்தையில் மது விற்ற 30 க்கும் மேற்பட்டோர் கைது. ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல்

அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக சமூக வலை தளங்கள் மற்றும் ரகசிய தகவலின் பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் தனிப்படை போலீசார் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, குன்றத்தூர், போரூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பார்களிலும் கள்ளச்சந்தையில் மது பானங்கள் 24 மணி நேரமும் விற்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்கப்பட்ட பார்களிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களும், மதுபானங்கள் விற்பனை செய்த 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது கைதுசெய்யப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். டாஸ்மாக் பார்கள் இயங்கும் பகுதியில் உள்ள உள்ளூர் போலீசார் டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை மாமூலாக பெற்றுக்கொண்டு 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். மேலும் இந்த காவல் மாவட்டத்தில் இரண்டு மதுவிலக்கு போலீஸ் நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது அவர்களும் தங்களின் பங்கிற்கு மாமூல் பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்ததால் கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த சோதனையில் இறங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் உள்ளூர் போலீசாருக்கு தெரியாமல் இந்த சோதனை நடைபெற்றதால் போலீசார் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.