ETV Bharat / state

ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல்....4 பேர் கைது

author img

By

Published : Sep 20, 2022, 11:08 AM IST

தமிழ்நாடு ஆந்திர எல்லையில் இரு வேறு பேருந்துகளில் கடத்தி வரப்பட்ட சுமார் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா பறிமுதல்
கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் கிரியாசக்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியிலும் வாகன தனிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் நேற்று(செப்.19) இரவு ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 5.1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்குன்றம் வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த அஸ்கோர்ஸ்(48) மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சங்கர் கபாலி(18) ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற வாகன சோதனையில் இன்று(செப்.20) அதிகாலை ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நவ்ஷத்(36), பைஜி(41), ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா கேக் என்ற புதிய வகை போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் கிரியாசக்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியிலும் வாகன தனிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் நேற்று(செப்.19) இரவு ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 5.1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்குன்றம் வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த அஸ்கோர்ஸ்(48) மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சங்கர் கபாலி(18) ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற வாகன சோதனையில் இன்று(செப்.20) அதிகாலை ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நவ்ஷத்(36), பைஜி(41), ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா கேக் என்ற புதிய வகை போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.