ETV Bharat / state

நான்கு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு; காமுகனுக்கு 10 ஆண்டுகள் சிறை!

author img

By

Published : Jun 8, 2019, 10:55 AM IST

திருவள்ளூர்: நான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காமுகனுக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார்.

காமுகன்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரும் இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது நான்கு வயது சிறுமியை பெர்னாண்டஸ் என்பவர் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடந்து வந்தது.

சிறைக்கு அழைத்து சென்ற போது

இந்நிலையில், இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜனலட்சுமி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து, சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக பெர்னாண்டஸ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து, காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெர்னாண்டஸ் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரும் இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது நான்கு வயது சிறுமியை பெர்னாண்டஸ் என்பவர் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடந்து வந்தது.

சிறைக்கு அழைத்து சென்ற போது

இந்நிலையில், இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜனலட்சுமி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து, சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக பெர்னாண்டஸ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து, காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெர்னாண்டஸ் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயிரம் 5 ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார்.


Body:திருவள்ளூர் மாவட்டம் பாண்டு ஊரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரும் இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களது மகள் 4 வயது சிறுமி பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு அருகே உள்ள சிறுவர்களுடன் பெற்றோர்கள் வரும் வரை விளையாடிக் கொண்டிருக்கும் போது. அந்த நிலையில் அதே பகுதியைச் சார்ந்த பெர்னான்டஸ் என்கின்ற ராஜ்குமார் வயது 35 கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இன்று வந்தது இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜனலட்சுமி ஆஜரானார்.வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பெர்னாண்டஸ் க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெர்னாண்டஸை சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.