ETV Bharat / state

நெல்லை அருகே கொடூரக் கொலை; வெட்டிய தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சகோதரர்கள்!

author img

By

Published : Feb 8, 2021, 10:34 PM IST

நெல்லையருகே தாழையூத்தில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு அண்ணன் தம்பி இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth-beheaded-in-thirunelveli-thalaiyuthu
நெல்லை அருகே கொடூரக்கொலை; வெட்டிய தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சகோதரர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து புலித்தேவர் நகரைச் சேர்ந்த சிதம்பரசெல்வம்(22); கூலிவேலை செய்து வந்தார். இவரும், கூலி வேலை செய்து வரும் இவரது தாய்மாமா மகன்களான பாலாஜி, அவரது தம்பி ராமையாவும் அடிக்கடி ஒன்றாக மதுஅருந்துவது வழக்கம். சிதம்பரசெல்வம், பாலாஜியின் மனைவியை தவறாக பேசியது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இன்று (பிப்ரவரி 8) வழக்கம்போல் சிதம்பரசெல்வம், பாலாஜி, அவரது சகோதர் ராமையா, பாலாஜியின் நண்பர்கள் என ஆறு பேராக அருகிலுள்ள கல்லறைத்தோட்டத்தில் அமர்ந்து மதுக்குடித்துள்ளனர். அப்போது, என்னுடைய மனைவியை எப்படி தவறாக பேசலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிதம்பரசெல்வத்தை வெட்டியுள்ளார். இதில், அவரது தலை துண்டானது. துண்டான தலையை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு சென்று பாலாஜியும், ராமையாவும் சரணடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், சிதம்பரசெல்வத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் நடந்தபோது பாலாஜி, ராமையாவுடன் இருந்த மூன்று பேரை காவலர்கள் தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் : தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் நூதன போராட்டம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து புலித்தேவர் நகரைச் சேர்ந்த சிதம்பரசெல்வம்(22); கூலிவேலை செய்து வந்தார். இவரும், கூலி வேலை செய்து வரும் இவரது தாய்மாமா மகன்களான பாலாஜி, அவரது தம்பி ராமையாவும் அடிக்கடி ஒன்றாக மதுஅருந்துவது வழக்கம். சிதம்பரசெல்வம், பாலாஜியின் மனைவியை தவறாக பேசியது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இன்று (பிப்ரவரி 8) வழக்கம்போல் சிதம்பரசெல்வம், பாலாஜி, அவரது சகோதர் ராமையா, பாலாஜியின் நண்பர்கள் என ஆறு பேராக அருகிலுள்ள கல்லறைத்தோட்டத்தில் அமர்ந்து மதுக்குடித்துள்ளனர். அப்போது, என்னுடைய மனைவியை எப்படி தவறாக பேசலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிதம்பரசெல்வத்தை வெட்டியுள்ளார். இதில், அவரது தலை துண்டானது. துண்டான தலையை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு சென்று பாலாஜியும், ராமையாவும் சரணடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், சிதம்பரசெல்வத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் நடந்தபோது பாலாஜி, ராமையாவுடன் இருந்த மூன்று பேரை காவலர்கள் தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் : தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.