ETV Bharat / state

பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய கணவர் கைது

author img

By

Published : May 30, 2020, 8:09 PM IST

திருநெல்வேலி: தன்னை ஏமாற்றி பண மோசடி செய்ததுடன் தகாத வார்த்தையால் திட்டியதாக கணவர் மீது பெண் காவலர் அளித்த புகாரின் பேரில தலைமறைவாக இருந்த கணவர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார்.

Women police husband arrested for defaming in nellai
Women police husband arrested for defaming in nellai

நெல்லை மாவட்டம் களக்காட்டில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கராணி (37). இவரை ராதாபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார் (40) என்பவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். அந்த சமயத்தில் சிவ பிரேம்குமார் தங்க ராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகளை பெற்றுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே சிவ பிரேம்குமாரிடம் கொடுத்த பணத்தையும் நகைகளையும் திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவந்த சிவ பிரேம்குமார் தங்க ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தங்கராணி ராதாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் ராதாபுரம் பொறுப்பு ஆய்வாளர் ஜெகதா, பெண்கள் வன்கொடுமை, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வந்த நிலையில், தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்த சிவ பிரேம்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க... திருநெல்வேலி அருகே கணவர் மீது பெண் காவலர் புகார்

நெல்லை மாவட்டம் களக்காட்டில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கராணி (37). இவரை ராதாபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார் (40) என்பவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். அந்த சமயத்தில் சிவ பிரேம்குமார் தங்க ராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகளை பெற்றுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே சிவ பிரேம்குமாரிடம் கொடுத்த பணத்தையும் நகைகளையும் திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவந்த சிவ பிரேம்குமார் தங்க ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தங்கராணி ராதாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் ராதாபுரம் பொறுப்பு ஆய்வாளர் ஜெகதா, பெண்கள் வன்கொடுமை, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வந்த நிலையில், தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்த சிவ பிரேம்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க... திருநெல்வேலி அருகே கணவர் மீது பெண் காவலர் புகார்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.