ETV Bharat / state

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் எட்டாவது இடம்...! - பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

திருநெல்வேலி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் எட்டாவது இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
author img

By

Published : Apr 19, 2019, 5:10 PM IST

இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதீஷ் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகளில் உள்ள 12 ஆயிரத்து 807 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 11 ஆயிரத்து 496 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது மாநில அளவில் எட்டாவது இடம் என புள்ளி விபரம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் 89.8% அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறிய அவர் கடந்த ஆண்டுகளில் பத்தாவது இடத்திலிருந்த திருநெல்வேலி மாவட்டம் இந்த ஆண்டு 8ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது எனக் கூறினார்.

இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதீஷ் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகளில் உள்ள 12 ஆயிரத்து 807 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 11 ஆயிரத்து 496 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது மாநில அளவில் எட்டாவது இடம் என புள்ளி விபரம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் 89.8% அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறிய அவர் கடந்த ஆண்டுகளில் பத்தாவது இடத்திலிருந்த திருநெல்வேலி மாவட்டம் இந்த ஆண்டு 8ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது எனக் கூறினார்.

கடந்த ஆண்டு பத்தாவது இடத்தில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் இந்த ஆண்டு 8-வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது என்றும்
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்து என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேட்டி.


நெல்லை மாவட்டத்தில் நேற்றையத்தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றத்தை அடுத்து இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது,

திருநெல்வேலி மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்து 807 மாணவர்களில் 11 ஆயிரத்து 496 மாணவர்கள தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது மாநில அளவில் ஏழாவது இடம். 89.8% அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டு பத்தாவது இடத்தில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் இந்த ஆண்டு 8-வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்து இருப்பதாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தற்போது கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார் மேலும்

வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும், அதிகமான வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள், குறித்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை வாக்குச்சாவடிகள் குறித்தும் அரசியல் கட்சியினுடைய முகவர்களுடன் அடுத்த கட்டமாக நடைபெறும். என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.