ETV Bharat / state

'மதிமுக-காங்கிரஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது' - கே.எஸ். அழகிரி

author img

By

Published : Sep 6, 2019, 2:40 PM IST

நெல்லை: மதிமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து தோழமைக் கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.

ks-alagiri

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மூத்த தலைவர்கள் ஹெச். வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, மோடி தலைமையிலான அரசு ப. சிதம்பரம் மீது ஜனநாயக விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது என்றார். அவரை கைது செய்ய வேண்டும் என்பதே அரசின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது என்றும் அதன் மூலம் அவர்கள் காங்கிரஸ் கட்சியை பலவீனப் படுத்தவேண்டும் என செயல்படுவதாகவும் சாடினார். காங்கிரஸ் கட்சியை குறி வைத்து செய்யும் செயல்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்துக்கே கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

கே.எஸ். அழகிரி செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், தங்களுடைய கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி எனவே கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சியினருடன் கலந்து பேசி நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்போம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும் மதிமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது எனவும் விளக்கமளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெறவைப்பது தங்கள் கடமை எனக் கூறியிருப்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றார்.

காங்கிரஸ் கட்சியினர் திகார் சிறையில்தான் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டி இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போர், இதற்காக காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தை திகார் சிறையில் நடத்த தயாராக இருக்கிறோம் என்றார். தாங்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் கூட்டத்தை நடத்தியவர்கள் என்பதால் இதற்காக சிறை செல்ல அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மூத்த தலைவர்கள் ஹெச். வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, மோடி தலைமையிலான அரசு ப. சிதம்பரம் மீது ஜனநாயக விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது என்றார். அவரை கைது செய்ய வேண்டும் என்பதே அரசின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது என்றும் அதன் மூலம் அவர்கள் காங்கிரஸ் கட்சியை பலவீனப் படுத்தவேண்டும் என செயல்படுவதாகவும் சாடினார். காங்கிரஸ் கட்சியை குறி வைத்து செய்யும் செயல்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்துக்கே கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

கே.எஸ். அழகிரி செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், தங்களுடைய கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி எனவே கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சியினருடன் கலந்து பேசி நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்போம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும் மதிமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது எனவும் விளக்கமளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெறவைப்பது தங்கள் கடமை எனக் கூறியிருப்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றார்.

காங்கிரஸ் கட்சியினர் திகார் சிறையில்தான் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டி இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போர், இதற்காக காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தை திகார் சிறையில் நடத்த தயாராக இருக்கிறோம் என்றார். தாங்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் கூட்டத்தை நடத்தியவர்கள் என்பதால் இதற்காக சிறை செல்ல அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்தார்.

Intro:மதிமுக காங்கிரஸ் கட்சியிடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது.நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து தோழமை கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என நெல்லையில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி.Body:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி,மூத்த தலைவர்கள்,வசந்த குமார், பீட்டர் அல்போன்ஸ், சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்திட வேண்டும் என நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது மோடியின் அரசாங்கம் பா. சிதம்பரம் மீது ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அவரை கைது செய்ய வேண்டும் என்பதே அரசின் ஒற்றை நோக்கம், அதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பலவீன படுத்த வேண்டும் என செயல்படுகின்றனர். சிபிஐ வழக்கில் ஒரு நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கபட்டு உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் வேறு ஒரு தீர்ப்பை வழங்குகிறது.. இதன் மூலம் நீதிமன்றங்களை அவர்கள் கைப்பற்ற கூடிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் காங்கிரஸ் கட்சியை குறி வைத்து செய்யும் செயல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இத்திய ஜனநாயகத்துக்கே கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.மேலும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசிய அவர் எங்கள் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி எனவே கூட்டணி தோழமை கட்சியினர் கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும் மதிமுக காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என தெரிவித்தர்.வி.சிக வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி பெறவைப்பது எங்கள் கடமை என சொல்லியிறுப்பது அனைத்தும் உள்ளடக்கியது என தெரிவித்தார். சி பி ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கே.எஸ் அழகிரி பதில், சிபி ராதாகிருஷ்ணன் ரொம்ப நல்லவர்.. சில நேரங்களில் அவர் உண்மையை பேசுவார், அதனால் உண்மையை பேசி உள்ளார் எனவும் காங்கிரஸ்காரர்கள் திகார் சிறையில் தான் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டி இருக்கும் என சுப்பிரமணியசுவாமி கூறிய கருத்துக்கு பதில்ளித்த அவர் ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போர், இதற்காக காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தை திகார் ஜெயிலில் நடத்த தயாராக இருக்கிறோம், சுதந்திர போராட்டத்திற்காக சிறையில் கூட்டத்தை நடத்தியவர்கள் நாங்கள், இதற்காக சிறை செல்ல நாங்கள் அஞ்சவில்லை என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.