ETV Bharat / state

தந்தை, மகன் சிறை மரணம் - தமிழ்நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும்

author img

By

Published : Jun 25, 2020, 12:14 AM IST

திருநெல்வேலி: தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.

vikramaraja
vikramaraja

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் சிறை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், அவர்களது இறப்பிற்கு காரணமான இரண்டு காவலர்களையும் பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பென்னிக்ஸ், ஜெயராஜின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் இரண்டாவது நாளாக உடற்கூறாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு டிஜிபி மற்றும் முதலமைச்சருக்கு நேற்று புகார் மனுக்களை அனுப்பினோம். இதில், சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவர் மீதும் சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இன்று இரவுக்குள் இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், நாளை காலை நெல்லையில் எங்களது மாநில தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவிப்போம். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் சிறை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், அவர்களது இறப்பிற்கு காரணமான இரண்டு காவலர்களையும் பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பென்னிக்ஸ், ஜெயராஜின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் இரண்டாவது நாளாக உடற்கூறாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு டிஜிபி மற்றும் முதலமைச்சருக்கு நேற்று புகார் மனுக்களை அனுப்பினோம். இதில், சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவர் மீதும் சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இன்று இரவுக்குள் இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், நாளை காலை நெல்லையில் எங்களது மாநில தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவிப்போம். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.