ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் நல்லடக்கம்!

author img

By

Published : Sep 12, 2020, 2:32 PM IST

நெல்லை: கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த தச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The body of the Assistant Inspector of Police who was killed by Corona is ready to sound 21 shot!
The body of the Assistant Inspector of Police who was killed by Corona is ready to sound 21 shot!

நெல்லை மாவட்டம் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் முருகன் (58). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் முருகனின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கரையிருப்பு பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கரோனாவால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

இறுதியாக காவல்துறை சார்பில், 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் அவரது உடல் கரையிருப்பு பகுதி மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உதவி காவல் ஆய்வாளர் முருகனுக்கு தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:குட்கா விவகாரம்: உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக திமுக வழக்கு

நெல்லை மாவட்டம் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் முருகன் (58). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் முருகனின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கரையிருப்பு பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கரோனாவால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

இறுதியாக காவல்துறை சார்பில், 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் அவரது உடல் கரையிருப்பு பகுதி மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உதவி காவல் ஆய்வாளர் முருகனுக்கு தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:குட்கா விவகாரம்: உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக திமுக வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.