ETV Bharat / state

பிரபாகரனுக்கு ஆதரவாக பேசிய வழக்கில் சீமான் நேரில் ஆஜர்!

author img

By

Published : Jun 15, 2019, 5:39 PM IST

திருநெல்வேலி: இந்திய இறையாண்மைக்கு ஏதிராகவும், பிரபாகரனை ஆதரித்து பேசியதாகவும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அவர் இன்று நேரில் ஆஜரானார்.

seeman

நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதியன்று தமிழர் அமைப்புகள், வழகறிஞர்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் அவர் பேசியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அதே மாதம் 22ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் அடுத்த இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணைக்காக ஜேஎம் 1 நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னை நீண்ட காலம் சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்டதாகவும், இது முழுக்க முழுக்க புனையப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தார்.

நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதியன்று தமிழர் அமைப்புகள், வழகறிஞர்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் அவர் பேசியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அதே மாதம் 22ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் அடுத்த இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணைக்காக ஜேஎம் 1 நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னை நீண்ட காலம் சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்டதாகவும், இது முழுக்க முழுக்க புனையப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தார்.

இந்திய இறையாண்மைக்கு ஏதிராகவும் பிரபாகரனை ஆதரித்து பேசியதாக சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் விசாரனைக்காக நெல்லை ஜே.எம் 1 நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் கடந்த 17/2/2009 ஆம் ஆண்டு தமிழர் அமைப்புகள் மற்றும் வழகறிஞர்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது இந்திய இறையாண்மைக்கும் எதிராக அவர் பேசியதாக கூறி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 22 ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கில் அவர் 24 ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இது தொடர்பான வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக இன்று JM 1 நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார் இந்த வழக்கு விசாரனையை வரும் 19.8.2019 அன்று மீண்டும் விசாரனைக்கு வரவேண்டும் என்று நீதிபதி பாபு உத்திரவிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது எங்களை போன்றவர்களை ஒடுக்கும் விதத்தில் தான் அரசு செயல்படுகிறது, இது திமுக ஆட்சி காலத்தில் இந்தவழக்கு போடப்பட்டது இது புனையப்பட்ட வழக்கு என்னை நீண்ட காலம் சிறையில் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கு போடுகிறார்கள் என் மீது போடப்பட்ட சட்டம் செல்லாது என்று இரண்டு முறை நீதிமன்றம் உத்திரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்

பேட்டி சீமான் ( நாம் தமிழர் கட்சி )
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.