ETV Bharat / state

கராத்தே போட்டியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு! - தென்காசி கராத்தே போட்டி

நெல்லை: தென்காசியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

karate state tournament
author img

By

Published : Sep 28, 2019, 8:39 PM IST

நெல்லை மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தென்காசி அருகிலுள்ள மேலகரம் சமுதாய நலக்கூட அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கராத்தே சண்டை இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கராத்தே சங்கத் தலைவர் வைகுண்டர், திருநெல்வேலி மாவட்ட கராத்தே சங்க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கராத்தே போட்டியில் கட்டாக் ஆகிய இரண்டு பிரிவுகளில் எட்டு வயது முதல் 15 வயதுவரை உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கராத்தே கிளப் சார்பில் நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் இது குறித்து நெல்லை மாவட்ட கராத்தே இயக்குநர் கூறும்போது, தற்காப்பு கலைகளை அரசு பள்ளிகளில் மூன்று மாதங்கள் நடத்தப்பட அரசு ஆணை பிறப்பித்து பயிற்சி வகுப்பு நடத்தி வரும் நிலையில், அதனை பத்து மாதங்களாக நீட்டிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கராத்தே போட்டியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

மேலும் படிக்க: இலங்கைக்கு கிடைத்த மலிங்கா 2.0!

நெல்லை மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தென்காசி அருகிலுள்ள மேலகரம் சமுதாய நலக்கூட அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கராத்தே சண்டை இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கராத்தே சங்கத் தலைவர் வைகுண்டர், திருநெல்வேலி மாவட்ட கராத்தே சங்க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கராத்தே போட்டியில் கட்டாக் ஆகிய இரண்டு பிரிவுகளில் எட்டு வயது முதல் 15 வயதுவரை உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கராத்தே கிளப் சார்பில் நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் இது குறித்து நெல்லை மாவட்ட கராத்தே இயக்குநர் கூறும்போது, தற்காப்பு கலைகளை அரசு பள்ளிகளில் மூன்று மாதங்கள் நடத்தப்பட அரசு ஆணை பிறப்பித்து பயிற்சி வகுப்பு நடத்தி வரும் நிலையில், அதனை பத்து மாதங்களாக நீட்டிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கராத்தே போட்டியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

மேலும் படிக்க: இலங்கைக்கு கிடைத்த மலிங்கா 2.0!

Intro:தென்காசியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்


Body:நெல்லை மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி தென்காசி அருகிலுள்ள மேலகரம் சமுதாய நலக்கூட அரங்கத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கராத்தே சண்டை இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார் கன்னியாகுமரி மாவட்ட கராத்தே சங்கத்தலைவர் வைகுண்டர் திருநெல்வேலி மாவட்ட கராத்தே சங்க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த கராத்தே போட்டியில் கட்டாக் ஆகிய இரு பிரிவுகளில் 8 வயது முதல் 15 வயது வரை பூர்த்தி அடைந்தவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கராத்தே கிளப் சார்பில் நிர்வாகிகள் வழங்கினர் மேலும் கராத்தே பயிற்சியாளர் கூறும்போது தற்போது இந்த தற்காப்பு கலை பயிற்சி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றுவரும் நிலையில் தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மூன்று மாதங்கள் நடத்தப்பட ஆணை பிறப்பித்து தற்போது பயிற்சி வகுப்பு நடத்தி வரும் நிலையில் இந்த பயிற்சி வகுப்பை 10 மாதங்கள் நடத்திடவும் அரசு அனுமதி வழங்கி தற்பாதுகாப்பு பயிற்சி கலையை கற்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்திட பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்


Conclusion:பேட்டி
சண்முகம்
நெல்லை மாவட்ட கராத்தே இயக்குனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.