ETV Bharat / state

காரில் கடத்திய மது பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர்

author img

By

Published : Apr 11, 2019, 9:02 AM IST

திருநெல்வேலி: நெல்லை டவுன் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மது

திருநெல்வேலி டவுன் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.

காரில் இருந்த 82 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் காரில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், பெங்களூருவில் வேலை செய்துவரும் இவர் சொந்த ஊரில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது தெரியவந்தது.

மேலும் நான்கு லிட்டர் மதுபானம் மட்டுமே கொண்டு செல்லமுடியும் என்றும், கைப்பற்றப்பட்ட மது 15 லிட்டருக்கு மேல் இருப்பதால், அதனை பறக்கும் அலுவலர்கள் பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி டவுன் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.

காரில் இருந்த 82 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் காரில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், பெங்களூருவில் வேலை செய்துவரும் இவர் சொந்த ஊரில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது தெரியவந்தது.

மேலும் நான்கு லிட்டர் மதுபானம் மட்டுமே கொண்டு செல்லமுடியும் என்றும், கைப்பற்றப்பட்ட மது 15 லிட்டருக்கு மேல் இருப்பதால், அதனை பறக்கும் அலுவலர்கள் பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை டவுண் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 
82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மதுவிலக்கு போலீசாரிடம் 
ஒப்படைக்குபட்டது. 


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 
சுரேஷ். பெங்களுரில் இருந்து நெல்லை வந்தவர் நெல்லையில் இருந்து ஒரு 
வாடகை காரில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது டவுண் 
பகுதியில் கூட்டுறவு சார்பதிவாளர் முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இவர் வந்த காரையும் மடக்கி சோதனை போட்டதில் காரில் 82 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது, உடனடியாக மது பாட்டில்களை பறக்கும் 
படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் 
உறவினர் திருமணவிழாவிற்கு வாங்கி செல்வதா கூறியுள்ளார். இருந்தபோது ஒரு 
நபர் 4 லிட்டம் மதுபானம் மட்டுமே கொண்டு செல்லமுடியும் , இதில் 15 
லிட்டருக்கு மேலாக இருந்ததால் அதனை பறக்கும் அதிகாரிகள் பறிமுதல் 
செய்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் செலவின 
தேர்தல் பார்வையாளார் மணி பறக்கும்படை அதிகாரிகள் செய்யும் சோதனைகளை 
ஆய்வு செய்தார் , அதிகாரிகள் யாரும் தவறு செய்கிறார்கள என்பது குறித்தும் 
கண்காணித்தார். பின்னர் பறக்கும் படை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை 
வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.