ETV Bharat / state

பாபநாசம் கோயிலில் காணாமல்போன 200 கிராம் தங்க நகைகள்?

பாபநாசம் கோயிலில் 200 கிராம் தங்க நகைகள் காணாமல்போனது தொடர்பாக, கோயில் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்காத நிலையில், காவல் துறையினர் கோயில் ஊழியர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

author img

By

Published : Dec 8, 2020, 6:28 AM IST

papanasam temple jewel theft
பாபநாசம் கோயிலில் காணாமல் போன 200கிராம் தங்க நகைகள்?

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே வி.கே. புரத்தில் பிரசித்திப் பெற்ற பாபநாசம் திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை பாபநாசம் அணைப்பகுதிக்கு வந்துசெல்லும் பெரும்பாலான மக்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலில், உயிரிழந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமானோர் சனிக்கிழமை வந்துசெல்வார்கள்.

கோயில் எதிரே ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால் பாவங்கள் யாவும் நீங்கிவிடும். அதனாலேயே இக்கோயிலுக்கு பாபநாசம் எனப் பெயர் ஏற்பட்டதாக ஒரு வரலாறும் உண்டு. இந்தச் சூழ்நிலையில், பாபநாசம் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்க நகைகள் காணாமல்போனதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், நகைகள் காணாமல்போனது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை. இது குறித்து காவல் துறையினரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சுமார் 200 கிராம் அளவிலான தங்க நகைகள் காணாமல்போனதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றனர்.

நகைகள் காணாமல்போனது தொடர்பாக கோயில் நிர்வாகம் இதுவரை புகார் அளிக்காதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நகைகள் காணாமல்போனது தொடர்பாக கோயிலில் பணிபுரிந்துவரும் பெண் உள்பட மூன்று ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி: விவசாயிகள் வேதனை!

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே வி.கே. புரத்தில் பிரசித்திப் பெற்ற பாபநாசம் திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை பாபநாசம் அணைப்பகுதிக்கு வந்துசெல்லும் பெரும்பாலான மக்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலில், உயிரிழந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமானோர் சனிக்கிழமை வந்துசெல்வார்கள்.

கோயில் எதிரே ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால் பாவங்கள் யாவும் நீங்கிவிடும். அதனாலேயே இக்கோயிலுக்கு பாபநாசம் எனப் பெயர் ஏற்பட்டதாக ஒரு வரலாறும் உண்டு. இந்தச் சூழ்நிலையில், பாபநாசம் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்க நகைகள் காணாமல்போனதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், நகைகள் காணாமல்போனது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை. இது குறித்து காவல் துறையினரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சுமார் 200 கிராம் அளவிலான தங்க நகைகள் காணாமல்போனதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றனர்.

நகைகள் காணாமல்போனது தொடர்பாக கோயில் நிர்வாகம் இதுவரை புகார் அளிக்காதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நகைகள் காணாமல்போனது தொடர்பாக கோயிலில் பணிபுரிந்துவரும் பெண் உள்பட மூன்று ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி: விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.