ETV Bharat / state

பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

author img

By

Published : Aug 21, 2019, 9:15 PM IST

திருநெல்வேலி: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தண்ணீர் திறந்து வைத்தார்.

சீறிபாயும் தண்ணீர்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் , பொதுமக்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

தண்ணீர் திறந்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், பாபநாசம் அணையில் இருந்து முதல் கட்டமாக விவசாயம், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 24,090 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதைதொடர்ந்து வருகின்ற 26ஆம் முதல் முதலமைச்சரின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் , பொதுமக்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

தண்ணீர் திறந்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், பாபநாசம் அணையில் இருந்து முதல் கட்டமாக விவசாயம், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 24,090 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதைதொடர்ந்து வருகின்ற 26ஆம் முதல் முதலமைச்சரின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

Intro:விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து இன்று மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் திறந்து வைத்தார் .Body:விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து இன்று மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் திறந்து வைத்தார் . இன்று முதல் கட்டமாக 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் 24,090 ஏக்கர் நிலம் பயன்பெறும் .
நெல்லை மாவட்டம் பாபநாசம் , சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் . இதனையேற்று இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார் . இந்த உத்தரவுப்படி இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் திறந்து வைத்தார் . இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில் இன்று முதல் கட்டமாக விவசாயம் , பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 21-08-19 முதல் 09-09-19 வரை 1000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . இதன்படி தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படும் . இதன் மூலம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி ,சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 24,090 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளார் . மேலும் வரும் 26-08-19 அன்று முதல்வர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் கூறினார் . இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் , சட்டமன்ற உறுப்பினர் முருகையாப்பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.