ETV Bharat / state

மதிப்பீட்டுக் குழுவினரிடம் அடுக்கடுக்காக புகார் அளித்த அரசுப் பள்ளி மாணவிகள்.. நெல்லையில் நடந்தது என்ன?

author img

By

Published : Aug 18, 2023, 3:41 PM IST

School inspection in Tirunelveli: அரசு மகளிர் பள்ளியில் ஆய்வு செய்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினரிடம் அரசுப் பள்ளி மாணவிகள் அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்ததால் பரபரப்பு நிலவியது.

Etv Bharat
Etv Bharat
போதிய வசதிகள் இல்லாததால் அரசு பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். நேற்று அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட மாணவிகள் பலர், பள்ளி மீது அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்தனர். குறிப்பாக, பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் ஷிப்ட் அடிப்படையில் கழிவறைக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், அதுவரை இயற்கை உபாதையை அடக்கி வைத்திருப்பதாகவும் வேதனையோடு தெரிவித்தனர்.

மேலும் இருக்கைகள் சரியில்லை, பள்ளி முன்பு ஓடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கடிதமாக எழுதி குழுத் தலைவர் அன்பழகனிடம் மாணவிகள் வழங்கினர். மாணவிகளின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழுத் தலைவர் அன்பழகன், மாநகராட்சி அதிகாரிகளிடம் விபரத்தை கேட்டறிந்தார்.

குறிப்பாக, இப்பள்ளியின் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. ஆனால் கால்வாய் ஓட்டம் இல்லாமல் தேங்கி கிடப்பதால் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. சுமார் 1,200 மாணவிகள் பயின்று வந்த நிலையில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு கல்லணை அரசுப் பள்ளியில் மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு போதிய இட வசதி இல்லாததால் 9ஆம் வகுப்பு மாணவிகள் கடந்த பல மாதங்களாக தரையில் அமர்ந்து பயின்று வருகின்றனர். குறிப்பாக, கரோனா காலத்தில் இங்குள்ள இரண்டு வகுப்பறைகளை மாநகராட்சி சுகாதாரப் பொருட்களை வைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தி வந்தது. ஆனால், தற்போது வரை இந்த வகுப்பறைகளை மாநகராட்சி ஒப்படைக்காததால் மாணவிகள் தரையில் அமர்ந்து படித்து வருகிறார்கள்.

மதிப்பீட்டுக் குழுவினர் வருவதை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவசரம் அவசரமாக தரையில் அமர்ந்திருந்த மாணவிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மதிப்பீட்டுக் குழுவினர் கழிவறையை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அன்பழகன், ”இப்பள்ளியில் மாணவிகள் நிறைய குறைகள் இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளனர்.

உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை சரி செய்வதாக கூறியுள்ளனர். கல்லணை பள்ளியில் உள்ள குறைகள் வருத்தமளிக்கிறது. பள்ளி முன்பு ஓடாத சாக்கடையால் துர்நாற்றம் வீசி மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பள்ளியில் மாணவிகளை தரையில் அமர்ந்து படிக்க வைப்பது தவறு” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாங்குநேரி விவகாரம்;பாதிக்கபட்ட மாணவனை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை !

போதிய வசதிகள் இல்லாததால் அரசு பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். நேற்று அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட மாணவிகள் பலர், பள்ளி மீது அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்தனர். குறிப்பாக, பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் ஷிப்ட் அடிப்படையில் கழிவறைக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், அதுவரை இயற்கை உபாதையை அடக்கி வைத்திருப்பதாகவும் வேதனையோடு தெரிவித்தனர்.

மேலும் இருக்கைகள் சரியில்லை, பள்ளி முன்பு ஓடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கடிதமாக எழுதி குழுத் தலைவர் அன்பழகனிடம் மாணவிகள் வழங்கினர். மாணவிகளின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழுத் தலைவர் அன்பழகன், மாநகராட்சி அதிகாரிகளிடம் விபரத்தை கேட்டறிந்தார்.

குறிப்பாக, இப்பள்ளியின் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. ஆனால் கால்வாய் ஓட்டம் இல்லாமல் தேங்கி கிடப்பதால் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. சுமார் 1,200 மாணவிகள் பயின்று வந்த நிலையில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு கல்லணை அரசுப் பள்ளியில் மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு போதிய இட வசதி இல்லாததால் 9ஆம் வகுப்பு மாணவிகள் கடந்த பல மாதங்களாக தரையில் அமர்ந்து பயின்று வருகின்றனர். குறிப்பாக, கரோனா காலத்தில் இங்குள்ள இரண்டு வகுப்பறைகளை மாநகராட்சி சுகாதாரப் பொருட்களை வைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தி வந்தது. ஆனால், தற்போது வரை இந்த வகுப்பறைகளை மாநகராட்சி ஒப்படைக்காததால் மாணவிகள் தரையில் அமர்ந்து படித்து வருகிறார்கள்.

மதிப்பீட்டுக் குழுவினர் வருவதை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவசரம் அவசரமாக தரையில் அமர்ந்திருந்த மாணவிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மதிப்பீட்டுக் குழுவினர் கழிவறையை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அன்பழகன், ”இப்பள்ளியில் மாணவிகள் நிறைய குறைகள் இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளனர்.

உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை சரி செய்வதாக கூறியுள்ளனர். கல்லணை பள்ளியில் உள்ள குறைகள் வருத்தமளிக்கிறது. பள்ளி முன்பு ஓடாத சாக்கடையால் துர்நாற்றம் வீசி மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பள்ளியில் மாணவிகளை தரையில் அமர்ந்து படிக்க வைப்பது தவறு” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாங்குநேரி விவகாரம்;பாதிக்கபட்ட மாணவனை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.