திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகேயுள்ள மணிமூர்த்திஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்இசக்கி. இவர் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (54). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், முத்துலட்சுமி திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணத்தை மீறய உறவில் இருப்பது பொன்இசக்கிக்கு தெரியவருகிறது. இதை அவர் அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் மற்ற இரண்டு மகளும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் நேற்று (மே 28) இரவும் இந்த பிரச்னை தொடர்பாக கணவன் – மனைவியிடையே தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பொன்இசக்கி மனைவி முத்துலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தச்சநல்லூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துவிட்டார்.
![Illegal relation திருநெல்வேலியில் மனைவி கொலை செய்த கணவன் கைது மனைவி கொலை செய்த கணவன் கைது திருமணத்தை மீறிய உறவு கள்ளக்காதல் கொலைகள் Man arrested for murder of wife in Tirunelveli Husband arrested for murder of wife Illegal Relationship Murders Suggested Mapping : state](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7389538_tvl.jpg)
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்து முத்துலட்சமியின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், மனைவியன் தவறான நடத்தையால் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
மேலும் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது