ETV Bharat / state

கணவன் மனைவியைக்கொல்வதும்; மனைவி கணவனைக்கொல்வதும் வேதனை அளிக்கிறது - வைகோ உருக்கம்

author img

By

Published : Jun 9, 2022, 5:13 PM IST

'கணவன் மனைவியைக் கொல்வதும்; மனைவி கணவனைக் கொல்வதும் வேதனை அளிக்கிறது' என நெல்லையில் நடைபெற்ற திருமண விழாவில் வைகோ உருக்கமாகப்பேசியுள்ளார்.

கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் வேதனை அளிக்கிறது; திருமண விழாவில் வைகோ பேச்சு
கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் வேதனை அளிக்கிறது; திருமண விழாவில் வைகோ பேச்சு

திருநெல்வேலி நாங்குநேரியில் உள்ள திருமண மண்டபத்தில் மதிமுக தொண்டரின் இல்லத்திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்கள் கோபால்சாமி, கற்பகவல்லி தம்பதியருக்கு திருக்குறள் தெளிவுரை புத்தகத்தையும் வைகோ பரிசளித்தார்.

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'மகிழ்ச்சியும் துக்கமும் நிறந்தது தான் வாழ்க்கை. மகிழ்ச்சி, புன்முறுவல், கண்ணீர் ஆகியவை கலந்ததாகத் தான் வாழ்க்கை இருக்கும். அண்மைக் காலமாக பத்திரிகைகளில் கணவன், மனைவியை கொலை செய்தார். மனைவி, கணவனைக் கொலை செய்தார் என்ற செய்திதான் வருகிறது.

திருமண விழாவில் வைகோ பேச்சு

இந்த செய்திகள் வேதனை அளிக்கின்றன. உயிருக்கு உயிராக ஒருவருக்கு ஒருவராக இருக்கவேண்டிய கணவன் மனைவிக்கு இடையே இப்படிப்பட்ட பேதங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்றுவிட்டது. ஈரூடல் ஓர் உயிராக மணமக்கள் வாழவேண்டும்' எனப் பேசினார்.

இதையும் படிங்க: காவி துண்டு அணிந்தவர்களை தொட்டு பார் - சேகர்பாபுவுக்கு ஹெச். ராஜா சவால்

திருநெல்வேலி நாங்குநேரியில் உள்ள திருமண மண்டபத்தில் மதிமுக தொண்டரின் இல்லத்திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்கள் கோபால்சாமி, கற்பகவல்லி தம்பதியருக்கு திருக்குறள் தெளிவுரை புத்தகத்தையும் வைகோ பரிசளித்தார்.

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'மகிழ்ச்சியும் துக்கமும் நிறந்தது தான் வாழ்க்கை. மகிழ்ச்சி, புன்முறுவல், கண்ணீர் ஆகியவை கலந்ததாகத் தான் வாழ்க்கை இருக்கும். அண்மைக் காலமாக பத்திரிகைகளில் கணவன், மனைவியை கொலை செய்தார். மனைவி, கணவனைக் கொலை செய்தார் என்ற செய்திதான் வருகிறது.

திருமண விழாவில் வைகோ பேச்சு

இந்த செய்திகள் வேதனை அளிக்கின்றன. உயிருக்கு உயிராக ஒருவருக்கு ஒருவராக இருக்கவேண்டிய கணவன் மனைவிக்கு இடையே இப்படிப்பட்ட பேதங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்றுவிட்டது. ஈரூடல் ஓர் உயிராக மணமக்கள் வாழவேண்டும்' எனப் பேசினார்.

இதையும் படிங்க: காவி துண்டு அணிந்தவர்களை தொட்டு பார் - சேகர்பாபுவுக்கு ஹெச். ராஜா சவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.