ETV Bharat / state

மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது: காவல் துறை விசாரணை

author img

By

Published : Nov 13, 2019, 12:48 PM IST

திருநெல்வேலி: வள்ளியூர் அருகே குடிபோதையில் மகனை அடித்துக்கொன்ற தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

murder son

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முத்து. இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால், இவரது மனைவி இவரை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பணகுடியில் வசித்து வருகிறார். முத்துவுடன் அவரது மகன் வேல்முருகன் மட்டும் வசித்து வந்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்

முத்துவின் மகன் வேல்முருகன் வள்ளியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக வேல்முருகன் கல்லூரிக்கு வராததால் அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரது செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரது வீட்டிற்கே சென்று நேரில் பார்த்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் நண்பர்கள், உடனடியாக இராதாபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வேல்முருகன் தலையில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகனை அவரது தந்தை முத்து அடித்து கொன்றுவிட்டு கும்பிகுளம் அருகே போதையில் உளறி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது மகனை அடித்து வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முத்து. இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால், இவரது மனைவி இவரை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பணகுடியில் வசித்து வருகிறார். முத்துவுடன் அவரது மகன் வேல்முருகன் மட்டும் வசித்து வந்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்

முத்துவின் மகன் வேல்முருகன் வள்ளியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக வேல்முருகன் கல்லூரிக்கு வராததால் அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரது செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரது வீட்டிற்கே சென்று நேரில் பார்த்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் நண்பர்கள், உடனடியாக இராதாபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வேல்முருகன் தலையில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகனை அவரது தந்தை முத்து அடித்து கொன்றுவிட்டு கும்பிகுளம் அருகே போதையில் உளறி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது மகனை அடித்து வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற
சைக்கோ தந்தை கைது, இராதாபுரம் போலீசார் விசாரணை.Body:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற
சைக்கோ தந்தை கைது, இராதாபுரம் போலீசார் விசாரணை.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சீலாத்திகுளத்தில் ஆடு மேய்க்கும்
தொழிலாளி முத்து இவர் குடிபழக்கத்திற்கு அடிமையானதால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம் இந்நிலையில் இவரது மனைவி இவரை பிரிந்து கடந்த 6 மாத காலமாக பணகுடியில் வசித்து
வருகிறார். முத்துவுடன் அவரது மகன் வேல்முருகன் மட்டும் வசித்து வருகிறார்.
வேல்முருகன் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில்
முதலாமாண்டு பயின்று வருகிறார். கடந்த 3 தினங்களாக வேல்முருகனை
அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரது செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரது வீட்டிற்கு இன்று நேரில்
போய் பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்து தூர்நாற்றம் அடித்துள்ளது.
இந்நிலையில் இராதாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது வேல்முருகன் தலையில் பலத்த காயத்துடனும் வெட்டு காயத்துடனும் இறந்து கிடந்தார். இக்கொலை குறித்து போலீசார் துப்பு
துலக்கியதில் அவரது தந்தை முத்து அடித்து கொன்று விட்டு கும்பிகுளம் அருகே போதையில் உளறி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது மகனை அடித்து
வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் போலீசார் தந்தை முத்துவை கைது செய்தனர். பின்பு வேல்முருகனின் உடலை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெத்த மகனை தந்தை கொலை
செய்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.