ETV Bharat / state

கறுப்பு ஆடுகள் வெளியேறியதால் அதிமுக தூய்மை அடைந்துவிட்டது - முதலமைச்சர் - Edappadi Palanisamy

திருநெல்வேலி: ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையினை தூண்ட வேண்டும் அப்படி தான் திமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளது என்றும், அதிமுகவில் இருந்த கறுப்பு ஆடுகள் வெளியேறி விட்டதால் கட்சி துய்மையானதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
author img

By

Published : Jul 7, 2019, 10:37 AM IST

Updated : Jul 7, 2019, 11:27 AM IST

தமிழ்நாடு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில், நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில் இவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தென்காசியில் நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பேசுகையில், திருநெல்வேலி மாவட்டம் அசந்து போகும் அளவில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதிமுகவை உடைப்பது போல் சிலர் கனவு கண்டனர். ஆனால் ஒருபோதும் நடக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை உடைக்க பல்வேறு திட்டங்களை போட்டார். அது ஒன்று கூட நிறைவேறவில்லை. இல்லாததை வாக்குறுதிகளாக மக்களிடம் கூறி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.

மேலும் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையினை தூண்ட வேண்டும், அப்படி தான் திமுக வெற்றிப் பெற்றுள்ளது. அதிமுகவில் இருந்த கறுப்பு ஆடுகள் வெளியேறி விட்டதால், கட்சி துய்மை அடைந்து விட்டது. திருநெல்வேலியில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக தென்காசியை அறிவிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் பரீசிலனை செய்யப்படும் என்றார்.

தமிழ்நாடு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில், நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில் இவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தென்காசியில் நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பேசுகையில், திருநெல்வேலி மாவட்டம் அசந்து போகும் அளவில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதிமுகவை உடைப்பது போல் சிலர் கனவு கண்டனர். ஆனால் ஒருபோதும் நடக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை உடைக்க பல்வேறு திட்டங்களை போட்டார். அது ஒன்று கூட நிறைவேறவில்லை. இல்லாததை வாக்குறுதிகளாக மக்களிடம் கூறி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.

மேலும் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையினை தூண்ட வேண்டும், அப்படி தான் திமுக வெற்றிப் பெற்றுள்ளது. அதிமுகவில் இருந்த கறுப்பு ஆடுகள் வெளியேறி விட்டதால், கட்சி துய்மை அடைந்து விட்டது. திருநெல்வேலியில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக தென்காசியை அறிவிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் பரீசிலனை செய்யப்படும் என்றார்.

Intro:ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையினை தூண்ட வேண்டும் அப்படி கிடைத்த வெற்றி தான் திமுக பெற்ற வெற்றி என்றும் தென்காசியை தனி மாவட்டமாக மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றும் தென்காசியில் நடைபெற்ற அமமுக தொண்டர்களை அதிமுகவில் இணைக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.Body:ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையினை தூண்ட வேண்டும் அப்படி கிடைத்த வெற்றி தான் திமுக பெற்ற வெற்றி என்றும் தென்காசியை தனி மாவட்டமாக மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றும் தென்காசியில் நடைபெற்ற அமமுக தொண்டர்களை அதிமுகவில் இணைக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


தமிழக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில் நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தென்காசியில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் இணைந்தனர். இதற்காக இசக்கி சுப்பைய்யாவிற்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டு இந்த விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் அங்கு அவரை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு. ராஜலெட்சுமி உள்ளிட்டோர் வரவேற்றனர் தொடர்ந்து சாலை மார்க்கமாக தென்காசி வந்த அவர் இணைப்பு விழாவில் கலந்து கொண்டார் இதில் தமிழக துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி கடம்பூர் ராஜூ ராஜலெட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இந்த விழாவில் அம்முகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உட்பட ஆயிரக்கணக்கானோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையி்ல் தாய் கழகமான அ.இ.அதிமுக.வில் இணைந்தனர். இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

நெல்லை மாவட்டம் அசந்து போகும் அளவில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த கட்சியை உடைப்பது போல் சிலர் கனவு கண்டார். இன்று அன்னான் தம்பி எப்படி இணைவார்களோ அப்படி இணைந்துள்ளோம்.அமமுகவில் கூடாரம் காலியாகி இங்கு இணைக்கப்படுகின்றனர் என்றும்

திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் போட்டார், இல்லாததை சொல்லி பொது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். நாம் பெற்றது தான் உண்மையான வெற்றி. அதிமுகவை புரட்சி தலைவி அம்மா மேல் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.


ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையினை தூண்ட வேண்டும் அப்படி கிடைத்த வெற்றி தான் திமுக பெற்ற வெற்றி. தென்காசியை தனி மாவட்டமாக மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றும் பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் பேசுகையில்,

அதிமுகவை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தொடங்குவதற்கு முன்னதாகவே அதற்கு பிள்ளையார் சுழி போட்டது திருநெல்வேலி தான்.

தொண்டர்கள் செய்த தியாகம் தான் இன்றும் அதிமுக வெற்றிநடை போடுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இனி நடைபெற போகும் இணைப்பு விழாவிற்கு இது ஒரு அச்சாரமாக அமைத்துள்ளது இந்த விழா என்றும் அதிமுகவில் மட்டும் தான் எந்த ஒரு தொண்டனாலும் முதலமைச்சர் ஆகமுடியும் என்று பேசினார்.Conclusion:
Last Updated : Jul 7, 2019, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.